search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "break door"

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் மங்கல விநாயகர்கோவில் தெருவில் வசிப்பவர் லாரன்ஸ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 59) மகள் ‌ஷன்மதியுடன் இரவில் வீட்டில் படுத்திருந்தார்.

    அப்போது அவர்களது வீட்டு பின்பக்க கதவை உடைத்து யாரோ உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மாடக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சைராஜன் (65) தனது மனைவி பொற்செல்வியுடன் அங்குள்ள கோவிலுக்குச் சென்றார். அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொற்செல்வி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பழனியப்பன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்தார்.

    அவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் வீடு திரும்பிய வெங்கடேஷ் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×