search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் கொள்ளை
    X

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் கொள்ளை

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் மங்கல விநாயகர்கோவில் தெருவில் வசிப்பவர் லாரன்ஸ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 59) மகள் ‌ஷன்மதியுடன் இரவில் வீட்டில் படுத்திருந்தார்.

    அப்போது அவர்களது வீட்டு பின்பக்க கதவை உடைத்து யாரோ உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மாடக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சைராஜன் (65) தனது மனைவி பொற்செல்வியுடன் அங்குள்ள கோவிலுக்குச் சென்றார். அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொற்செல்வி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×