search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "booking"

    • டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்.
    • சோழன் விரைவு ெரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பாதுகாப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையகட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

    அவருடன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார், வர்த்தக பிரிவு மேலாளர், எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அது சமயம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, உறுப்பினர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் அவன் விபரம் வருமாறு :

    பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை இரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்,

    சோழன் விரைவு இரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர், சோழன் விரைவு ரயிலுக்கான இணைப்பு ரயில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான ரயில் சேவை குறிப்பாக தாம்பரம், செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

    முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

    பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்கு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. #PongalFestive #TrainTicket

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். கடைசி நேர கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தற்போது ரெயில் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டி திட்டமிட்டு செல்லும் வகையில் 120 நாட்களுக்கு முன்கூட்டியே, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 15) வருவதால், 3 நாட்களுக்கு முன்கூட்டி, அதாவது ஜனவரி 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று(வியாழக்கிழமை) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களான நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு நீண்டது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 13-ந் தேதிக்கு முன்பதிவு இன்று(வெள்ளிக் கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. #PongalFestive #TrainTicket
    தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்கள் அரசு விரைவு பஸ்களில் இன்றும், நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். #TNGovtBus
    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1000 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பெரும்பாலனவை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பயணிகள் ஏறத் தயங்குகிறார்கள்.

    நீண்டதூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்தநிலையில் 2000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு ‘பாடி’ கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 300 புதிய பஸ்கள் விடப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 40 பஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    படுக்கை வசதியுடன் முதன் முதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொகுசு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களும் விடப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நவம்பர் மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசிநேர பயணமாக பஸ் பயணத்தை மேற்கொள்கிறார்கள்


    தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கக்கூடிய நிலை இருப்பதால் அவற்றில் இருந்து தப்பிக்க அரசு பஸ்களில் முன்பதிவு இப்போதே செய்து கொள்ளலாம். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டு இருப்பதால் தீபாவளி முன்பதிவு சிறப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்.

    300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில் சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது.

    இதுதவிர www.tn.stcin என்ற இணைய தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். #TNGovtBus
    வெளிநாட்டு பயணிகள் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய 365 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #TrainTicketBooking #ForeignTourist
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார். 
    ×