search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt express buses"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
    • உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னை :

    தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பஸ்களில் பயணிப்போர் உணவு அருந்துதல், இயற்கை உபாதைகளை கழித்தல் போன்றவற்றுக்கு நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

    அங்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    இதுதொடர்பாக அவ்வப்போது உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, போக்குவரத்து துறையின் உரிமம் பெறாத உணவகங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

    எனவே, பயணிகள் அறியும் வகையில் பஸ் நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக பட்டியலை வெளியிட வேண்டும் என தொடர் கோரிக்கையை சமூக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக தற்போது பஸ்களை நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற 51 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை அரசு பஸ் என்ற இணையதளத்தில் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    • அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் தரவை நாங்கள் செயலியில் பதிவேற்ற தொடங்கியுள்ளோம்.
    • தமிழகத்துக்குள்ளும், தமிழகத்துக்கு வெளியேயும் இயங்கும் அனைத்து அரசு விரைவு பஸ்களையும் கண்காணிக்க முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 'சவோ' என்னும் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகர பஸ்களின் வருகையை தெரிந்து கொள்வதற்கான செயலியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.

    இதன் மூலம் சென்னை நகரில் பஸ்களுக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் 'சவோ' செயலியை பயன்படுத்தி தாங்கள் செல்ல விரும்பும் பஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    அதேபோல் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

    சென்னை மாநகரில் இயங்கும் 3233 பஸ்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் 3233 பஸ்களின் வருகை குறித்த விவரங்களை தற்போது சென்னை பயணிகள் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து நீண்ட தூரம் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களிலும் இதே நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து தினமும் 950 பஸ்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த 'சவோ' செயலியை அரசு விரைவு பஸ்களுக்கும் விரிவுபடுத்தும் நிலையில் இனி அவர்களும் இந்த செயலியால் பயன் அடையலாம். இந்த செயலி மூலம் அரசு விரைவு பஸ்கள் எங்கு வந்து கொண்டிருக்கிறது. தாங்கள் செல்ல விரும்பும் அடுத்த பஸ் எப்போது என்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

    தற்போது முக்கிய பஸ் நிறுத்தங்கள் மற்றும் பஸ் நிலையங்களை தவிர மற்ற இடங்களுக்கு பஸ் எப்போது வரும் என்ற நேர கட்டுப்பாடு இல்லை. இந்த செயலி மூலம் பஸ் செல்லும் வழியில் எந்த இடத்தில் இருந்தபடியும் பஸ் எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் பஸ்களின் நேரங்களை தெரிந்து கொண்டு வசதியாக பயணிக்க முடியும்.

    இந்த செயலியில் பயணிகள் நுழைந்து, 'சர்ச் பஸ் ரூட்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், பஸ் தடம் எண்ணை டைப் செய்தால் தற்போது இயக்கப்படும் அனைத்து பஸ்களும் அதில் காட்டப்படும். அதன்பிறகு தாங்கள் செல்ல விரும்பும் பஸ்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.

    இந்த நடைமுறை சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் முதலில் அமலுக்கு வருகிறது. அதன்பிறகு மதுரை, திருச்சி மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து இயக்கப்படும் பஸ்களிலும் நடைமுறைக்கு வரும்.

    இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே 'சவோ' செயலி சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் இது விரைவில் நடைமுறைக்கு வரும்

    இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் தரவை நாங்கள் செயலியில் பதிவேற்ற தொடங்கியுள்ளோம்.

    தமிழகத்துக்குள்ளும், தமிழகத்துக்கு வெளியேயும் இயங்கும் அனைத்து அரசு விரைவு பஸ்களையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்" என்றார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்கள் அரசு விரைவு பஸ்களில் இன்றும், நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். #TNGovtBus
    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1000 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பெரும்பாலனவை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பயணிகள் ஏறத் தயங்குகிறார்கள்.

    நீண்டதூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்தநிலையில் 2000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு ‘பாடி’ கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 300 புதிய பஸ்கள் விடப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 40 பஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    படுக்கை வசதியுடன் முதன் முதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொகுசு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களும் விடப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நவம்பர் மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசிநேர பயணமாக பஸ் பயணத்தை மேற்கொள்கிறார்கள்


    தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கக்கூடிய நிலை இருப்பதால் அவற்றில் இருந்து தப்பிக்க அரசு பஸ்களில் முன்பதிவு இப்போதே செய்து கொள்ளலாம். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டு இருப்பதால் தீபாவளி முன்பதிவு சிறப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்.

    300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில் சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது.

    இதுதவிர www.tn.stcin என்ற இணைய தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். #TNGovtBus
    ×