search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank fraud"

    குன்னூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த தொழில் அதிபர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருட்டு போனதா ? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    குன்னூர்:

    ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (55). தொழில் அதிபர். இவர் ஊட்டியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் புளோரிடெக் நிறுவனம் என்ற பெயரில் மலர் சாகுபடி செய்வதற்காக 58 விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றார்.

    ரூ. 15 கோடி வரை பணம் பெற்று இருந்தார். அதனை திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது கடன் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது.

    அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவக்குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி ஊட்டி, குன்னூரில் உள்ள தொழில் அதிபர் ராஜனுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி சாலையில் உள்ள ராஜன்வீட்டின் கதவில் இருந்த பூட்டுக்கும் சீல் வைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    இது தொடர்பாக ஊட்டி போலீசிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் தெரிவித்து சென்றனர். கட்டிடம் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் அதிபர் ராஜன் தலைமறைவாகி விட்டார்.

    அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வருகிறார்கள். அவர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலும் மோசடி செய்து இருப்பதாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் குன்னூரில் சீல் வைக்கப்பட்டு இருந்த ராஜனின் வீட்டு கதவு சீல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் ஒட்டி இருந்த நோட்டீசும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆவணங்களை தொழில் அதிபர் ராஜன் திருடி சென்றாரா? அல்லது வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் கேட்ட போது, இது குறித்து குன்னூர் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளோம் என்றார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் வைத்த சீல் உடைக்கப்பட்ட சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ப.சிதம்பரத்தின் உறவினர் என கூறி ரூ.15 கோடி மோசடி செய்த தொழிலதிபர் தலைமறைவாகிவிட அவரது வீடு, அலுவலகத்துக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.
    ஊட்டி:

    ப.சிதம்பரத்தின் உறவினர் என கூறி ரூ.15 கோடி மோசடி செய்த தொழிலதிபர் தலைமறைவாகிவிட அவரது வீடு, அலுவலகத்துக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வால்சம் சாலையில் ‘பாங்க் ஆப் இந்தியா’ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேனேஜராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2012- 2015-ம் ஆண்டு வரை ஊட்டியைச் சேர்ந்த ராஜன் (வயது55), என்பவருக்கு சொந்தமான குரோவின் புளோரிடெக் என்ற நிறுவனத்துக்கு மலர் சாகுபடி செய்ய கடன் வழங்கினார்.

    ராஜன் சிறு விவசாயிகளுக்கு கடன் வாங்கி தரும் ஏஜெண்டாகவும் இருந்துள்ளார். விவசாயிகளின் ஆவணங்களை காட்டி வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது வங்கி உயர்அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

    இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் 15 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 58 விவசாயிகள் மலர் சாகுபடி செய்ய இந்த கடனை பெற்றதாக பொய் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. மலர் சாகுபடி மேற்கொள்ள தேவையான பசுமை குடில், சொட்டு நீர் பாசன கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கும், நிலத்தை குத்தகை எடுப்பதற்கும், இந்த கடன் வழங்கப்பட்டது என்ற, பொய்யான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

    வங்கியில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள முகவரியில், மலர் சாகுபடிக்கான பசுமைக் குடில் அமைக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வங்கி மேனேஜர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

    வங்கியில் பல்வேறு விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றுள்ள தொழில் அதிபர் ராஜன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    நேற்று சி.பி.ஐ.அதிகாரிகள் ஊட்டிக்கு வந்தனர். அவர்கள் ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள ராஜனுக்கு சொந்தமான வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். பின் குன்னூரில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் பிற கட்டிடங்களுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

    ராஜன் குன்னூர் டேன்ஸ் பள்ளி சாலையில் 4 கட்டிடங்கள் மற்றும் தனித்தனி குடியிருப்புக்கான அனுமதி பெற்று ‘மாஸ்டர் பிளான்’ சட்டத்தை மீறி ஒரே கட்டடமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு சென்றபோது ‘நான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர்’ என பொய் கூறி மிரட்டியுள்ளார். இதனால், அதிகாரிகள் இந்த கட்டிடத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தான் கட்டிடத்துக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

    இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஊட்டி, குன்னூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் சில கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்த தகவலை மட்டும் ஊட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். மற்றப்படி எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது என்றார்.

    மோசடி செய்த தொழில் அதிபர் ராஜன் கோவை உள்ளிட்ட பல இடங்களில் வங்கிகளில் பலகோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சீல் வைக்கப்பட்ட தகவலை அடுத்து ராஜன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ராஜன் வால்பாறையில் எஸ்டேட் மற்றும் தங்கும் விடுதிகள் வாங்கி குவித்துள்ளார்.

    அவர் வால்பாறை பகுதிகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து வால்பாறை வங்கிகளில் இவர் கடன் பெற்று மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கனிஷ்க் நிறுவனத்தின் மேலும் ரூ.138 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். #Kanishk #BankFraud

    சென்னை:

    சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் கனிஷ்க் நகைக்கடை உள்ளது. இந்த கடையை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையை சேர்ந்த பூபேஷ் குமார் ஜெயின் நடத்தி வந்தார். இங்கு தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற நகைகள் விற்கப்பட்டன.

    இந்த நிறுவனம் நகை இருப்பை அதிகம் காட்டியும், போலியான ஆவண நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்றது.

    இந்த கடனுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டித்தொகையையும், நிலுவைத்தொகையையும் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செலுத்தவில்லை. இதை கண்டறிந்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவித்தது.

    அந்த புகாரின் அடிப்படையில் பூபேஷ் குமார் உள்பட 6 பேர் மீது கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இந்த மோசடி குறித்து கனிஷ்க் நிறுவனம், அதன் இயக்குனர்கள் பூபேஷ் குமார் ஜெயின், அவரது மனைவி நீட்டா ஜெயின், பங்குதாரர்கள் உள்பட 6 பேர் மீது கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக் கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதையடுத்து மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்புள்ள நகை தொழிலகத்தை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது. வங்கியில் இருந்த ரூ.143 கோடி பணமும் முடக்கப்பட்டது. இதையடுத்து பூபேஷ் குமார் ஜெயினை அமலாக்கத்துறையினர் கடந்த மே 25-ந் தேதி கைது செய்தனர்.

    இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக செங்கல்பட்டு அருகே புதுப்பாக்கத்தில் பூபேஷ் குமாருக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலம், சென்னை நுங்கம்பாக்கம் வீடு, மும்பை அடுக்குமாடி குடியிருப்பு வீடு, குன்றத்தூர் 4 ஏக்கர் 41 சென்ட் நிலம், பூந்தமல்லி பிடாரி தாங்கலில் உள்ள 3 ஏக்கர் 63 சென்ட் நிலம், கொளப்பஞ்சேரியில் இருக்கும் 1.48 ஏக்கர் நிலம், தர்மபுரி மாவட்டம் பன்னிக்குளத்தில் உள்ள 7.09 ஏக்கர் நிலம், சென்னை அருகே முட்டுக்காட்டில் இருக்கும் 83.20 சென்ட் நிலம், மயிலாப்பூர் கத்தீட்ரல் சாலையில் உள்ள 2290 சதுர அடி நகைக்கடை, தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள 4200 சதுர அடியில் 4 தளங்களுடன் கூடிய அலுவலகம், பெரம்பூரில் 7,184 சதுர அடியில் உள்ள கட்டிடம் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். இந்த 14 சொத்துக்களின் மதிப்பு ரூ.138 கோடி ஆகும்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModi
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், பிரிட்டன் நாட்டில் குடியேற நிரவ் கோடி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. #warrantagainstNiravModi #NiravModi
    கடந்த நிதியாண்டில் மட்டும் 21 அரசு வங்கிகளில் வங்கி மோசடி மூலம் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. #RBI #ReserveBank #BankFraud
    போபால்:

    மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் கடந்த 2017-18-ம் ஆண்டில் அரசு வங்கிகளுக்கு வங்கி மோசடி மூலம் ஏற்பட்ட இழப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அவரின் மனுவுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, எந்தெந்த வங்கியில் என்னவிதமான மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து தெரிவிக்காமல், ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரத்தை மட்டும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரிசர்வ் வங்கி கடந்த 15-ம் தேதி சந்திரசேகர் கவுட்டுக்கு அளித்துள்ளது.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ''கடந்த 2017-18ம் நிதியாண்டில், அதாவது கடந்த மார்ச் 31-ம் தேதிவரையில், 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் ஒரு ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரின் மோசடி குறித்து இதில் குறிப்பிடவில்லை.


    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 390.75கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 224.86 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.ஆயிரத்து 928.25 கோடியும், அலகாபாத் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 520.37 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ. ஆயிரத்து 303.30 கோடியும், யூசிஓ வங்கிக்கு ரூ.ஆயிரத்து 224.64 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஐடிபிஐ வங்கிக்கு மோசடி மூலம் ரூ.ஆயிரத்து 116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 95.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 84.50 கோடியும், பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ரூ.ஆயிரத்து 29.23 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 15. 79 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190.77 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90.01 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89.25 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28.58 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.24.23 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் சென்றால் கூட அதைக்கூட மோசடி கணக்கில் எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை மோசடிகள் நடந்துள்ளன, எந்த வங்கியில் அதிகபட்சமாக மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.''

    இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். #RBI #ReserveBank #BankFraud
    ×