என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "auto bike hit"
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (21). இருவரும் சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
தினமும் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று வந்தனர். நேற்று வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த இருவரும் அங்கிருந்து நாகவேடுவிற்கு ஆட்டோவில் சென்றனர்.
நாகவேடு அருகே ஆட்டோ சென்ற போது எதிரே வந்த பைக் மீது மோதியது.
இதில் பைக் ஓட்டி வந்த சின்னராஜி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த குமரேசன் மற்றும் சுந்தரேசன் படுகாயமடைந்தனர். 2 பேரும் அரக்கோணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். சுந்தரேசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்