search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் அருகே ஆட்டோ-பைக் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    அரக்கோணம் அருகே ஆட்டோ-பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

    அரக்கோணம் அருகே ஆட்டோ மீது எதிரே வந்த பைக் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (21). இருவரும் சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    தினமும் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று வந்தனர். நேற்று வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த இருவரும் அங்கிருந்து நாகவேடுவிற்கு ஆட்டோவில் சென்றனர்.

    நாகவேடு அருகே ஆட்டோ சென்ற போது எதிரே வந்த பைக் மீது மோதியது.

    இதில் பைக் ஓட்டி வந்த சின்னராஜி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த குமரேசன் மற்றும் சுந்தரேசன் படுகாயமடைந்தனர். 2 பேரும் அரக்கோணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். சுந்தரேசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×