search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvSA"

    • 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது.
    • தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் இரட்டை சதமும் (200 ரன்), அலெக்ஸ் கேரி சதமும் (111 ரன்) அடித்தனர்.

    ஸ்டீவன் சுமித் 85 ரன்னும், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் தலா 51 ரன்னும் எடுத்தனர். 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆனார்.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 15 ரன் எடுத்திருந்தது. டிபுருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தது. எர்வீ 21 ரன்னிலும், டிபுருன் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்து களம் வந்த கயா சோன்டோ ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் பவுமா-வெர்ரின்னே ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை தாக்கு பிடித்தது. இடைவேளைக்கு பிறகு வெர்ரின்னே (33 ரன்) ஆட்டமிழந்தார்.

    பொறுமையாக விளையாடிய பவுமா அரை சதம் அடித்தார். அடுத்து களம் இறங்கிய மார்கோ ஜேன்சன் 5 ரன்னிலும், கேசவ் மகராஜ் 13 ரன்னிலும் அவுட் ஆனார். பவுமா 65 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றி உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    • ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.
    • 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது.

    அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 32 ரன்னுடனும், லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நிதானமான ஆடிய வார்னர் முதலில் சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.

    தனது சதத்தை அடித்த பின்னர் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் அதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளர். இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' மூலம் வெளியேறினார்.

    அவர் 254 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து களம் இறங்கிய க்ரீன் 6 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி ஜோடி மேற்கொண்டு ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    இறுதியில் அந்த அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இதுவரை 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் ஹெட் 48 ரன்னுடனும், ஹேரி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்.
    • ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.

    ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி கிரீன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 68.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32 ரன்னுடனும் லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் தனது 25-வது டெஸ்ட் சதத்தையும், 45-வது சர்வதேச சதத்தையும் அடித்து, சமீபத்திய விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.

    100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். போட்டிக்கு முன், வார்னர் 71.20 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 45.52 சராசரியுடன் 7922 ரன்கள் எடுத்திருந்தார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இன்றைய போட்டியின் மூலம் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
    • தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 100-வது டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிகெட்டில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை வெகுசிலரே அந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கிரீன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 24 சதங்கள் அடங்கும்

    • தென் ஆப்பிரிக்கா 67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்திருந்தது.
    • ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.

    67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், அதற்கடுத்து வந்த யான்சன் மற்றும் வெரெய்னே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

    இந்த பாட்னர்ஷிப்பை கிரீன் பிரித்தார். இருவரும் அரை சதம் அடித்திருந்த நிலையில் கிரீன் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்கள் சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும், போலண்ட் மற்றும் லயன் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா களமிறங்கினர். 1 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மார்னஸ் லாபுசாக்னே - வார்னர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    • ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ம் தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்.

    மெல்போர்னில்... 1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென் ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.

    பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன்.
    • இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும்.

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி காபா மைதானத்தில் துவங்கிய வேளையில் போட்டியின் இரண்டாம் நாளே ஆட்டம் முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது.பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் ஆல் அவட்டானதால் ஆஸ்திரேலிய அணி தங்களது கடைசி இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி துவங்கி ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு போட்டி முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்த மைதானம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானமும் டெஸ்ட் போட்டியை நடத்த ஏதுவான மைதானம் கிடையாது என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் ஏல்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்துகள் கூட இங்கு நன்றாக பவுன்ஸ் ஆகி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும். ஒன்றரை நாட்களிலேயே 34 விக்கெட்டுகள் விழுந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. போட்டி ஆரம்பித்த உடனே முடிந்து விட்டது. இந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது? என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது மாதிரியான ஆடுகளத்தை நான் பார்த்ததே கிடையாது.

    என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    • முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    பிரிஸ்பேன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 48.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 64 ரன்னும், பவுமா 38 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியும், தென்ஆப்பிரிக்க வீரர்களின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 50.3 ஓவரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    66 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 37.4 ஓவரில் 99 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 34 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க், போலண்டு தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா 2 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும், ஸ்மித் 6 ரன்னிலும், ஹெட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொடர் உல்க டெஸ்ட் சான்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளும் மிக கடுமையாக போராடுவர்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். அதே போல் காயம் காரணமாக விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம் பெறவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம் வருமாறு:

    பேட் கம்ம்னிஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், மைகேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்களும்,
    டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவிக்கவும் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.



    321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் லின் டக்அவுட்டிலும், ஆரோன் பிஞ்ச் 11 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் சிறப்பாக விளையாடி 102 பந்தில் 106 ரன்கள் சேர்த்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 63 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும், மேக்ஸ்வெல் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



    இதனால் தென்ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
    3-வது ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ், டேவிட் மில்லர் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்கிராம் 32 ரன்னில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 15.3 ஓவரில் 55 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



    4-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். சதம் அடித்த டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருவரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvSA
    அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvSA

    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும் என்பதால் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் (41), கிறிஸ் லின் (44), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (47) ஆகியோரின் சராசரி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 48.3 ஓவரில் 231 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா நான்கு விக்கெட்டுக்களும், பிரிடோரியஸ் 3 விக்கெட்டுக்களும், டேல் ஸ்டெயின் இ ரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிக் 9 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 16 ரன்னிலும் வெளியேறினார்கள். 3-வது வீரராக களம் இறங்கிய மார்கிராம் 19 ரன்னில் ரன்அவுட் ஆனார்.

    ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 68 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் டு பிளிசிஸ் உடன் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    அணியின் ஸ்கோர் 142 ரன்னாக இருக்கும்போது டு பிளிசிஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். அடுத்து வந்த கிளாசன் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

    டேவிட் மில்லர் கடைசி நிலை பேட்ஸ்மேன்களை வைத்து வெற்றிக்காக போராடினார். ஆனால் 51 ரன்கள் எடுத்த நிலையில் 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மில்லர் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 187 ரன்கள் எடுத்திருந்தது. 45 ரன்கள் தேவைப்பட்டது.



    ரபாடா 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு லுங்கி நிகிடி உடன் இம்ரான் தாஹிர் ஜோடி சேர்ந்தார். இவர் இணையும்போது 17 பந்தில் 29 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிகிடி 19 ரன்னுடனும், இம்ரான் தாஹிர் 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுக்களும், ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியது ஆஸ்திரேலியா. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி நாளைமறுநாள் (11-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் ஒரேயொரு டி20 போட்டி 17-ந்தேதி நடக்கிறது.
    ×