search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா தொடர்"

    • காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை.
    • 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக் கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித், கவாஜா சதம் அடித்தனர்.

    கவாஜா 195 ரன்னுடனும், ரென்ஷா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை.

    முதல் 2 செஷன்களும் மழையால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

    • உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர்.
    • ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

    உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டிரேவிஸ் ஹெட் கவாஜாவுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து ஆடிய ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.

    மறுபுறம் கவாஜா நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். 2வது ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195 ரன்களும் , ரென்ஷா 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    • இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து லைட்டர் கேட்டார்.
    • சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 0 ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.


    இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து புகைப்பிடிப்பது போல சைகை காட்டி லைட்டர் கேட்டார். இதை கவனித்த வர்ணனையாளர்கள் சிரித்தபடி கமெண்ட் செய்தனர்.

    அவர் ஹெல்மெட் சரிபார்ப்பதற்காக அதை கேட்டார். ஆனால் இது சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விரலில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளனர்.
    • அவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

    உள்ளூர் சூழலில் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    விரலில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. சிட்னி ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும், அடுத்து வரும் இந்திய டெஸ்ட் தொடரை மனதில் கொண்டும் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரை பயன்படுத்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அதே சமயம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் 78.57 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா இந்த டெஸ்லும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்க அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது.

    இன்னிங்சில் 9 முறை 200 ரன்னுக்குள் சுருண்டது. அண்மை காலமாக தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் படுசொதப்பலாக உள்ளது. இந்த டெஸ்டிலும் பேட்ஸ்மேன்கள் கேப்டன் டீன் எல்கர், பவுமா, சாரல் எர்வீ உள்ளிட்டோர் கைகொடுக்காவிட்டால், சரிவில் இருந்து மீள்வது கடினம் தான். மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் டி புருன் தாயகம் திரும்பி விட்டார். அவருக்கு பதிலாக வான்டெர் டஸன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 50 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டும் தென்ஆப்பிரிக்காவின் முயற்சி சிட்னியில் பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வானிலையை பொறுத்தவரை சிட்னியில் முதல் 4 நாட்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் மழை குறுக்கிடலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக விளையாடிய 21 டெஸ்டுகளில் ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கிறது. தென்ஆப்பிரிக்க அணி இங்கு 11 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த ஒரு வெற்றி 1994-ம் ஆண்டு கிடைத்தது ஆகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஸ்காட் போலன்ட், ஹேசில்வுட் அல்லது லான்ஸ் மோரிஸ்.

    தென்ஆப்பிரிக்கா: சாரல் எர்வீ, டீன் எல்கர் (கேப்டன்), பவுமா, வான்டெர் டஸன் அல்லது ஹென்ரிச் கிளாசென், கயா ஜோன்டா, கைல் வெரைன், மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, இங்கிடி அல்லது சிமோன் ஹர்மெர்.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தென் ஆப்பிரிக்க வீரர் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
    • சிட்னி டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டி பிரைன் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

    இதையடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் டி பிரைனுக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது.
    • தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் இரட்டை சதமும் (200 ரன்), அலெக்ஸ் கேரி சதமும் (111 ரன்) அடித்தனர்.

    ஸ்டீவன் சுமித் 85 ரன்னும், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் தலா 51 ரன்னும் எடுத்தனர். 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆனார்.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 15 ரன் எடுத்திருந்தது. டிபுருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தது. எர்வீ 21 ரன்னிலும், டிபுருன் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்து களம் வந்த கயா சோன்டோ ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் பவுமா-வெர்ரின்னே ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை தாக்கு பிடித்தது. இடைவேளைக்கு பிறகு வெர்ரின்னே (33 ரன்) ஆட்டமிழந்தார்.

    பொறுமையாக விளையாடிய பவுமா அரை சதம் அடித்தார். அடுத்து களம் இறங்கிய மார்கோ ஜேன்சன் 5 ரன்னிலும், கேசவ் மகராஜ் 13 ரன்னிலும் அவுட் ஆனார். பவுமா 65 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றி உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    • ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.
    • 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது.

    அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 32 ரன்னுடனும், லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நிதானமான ஆடிய வார்னர் முதலில் சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.

    தனது சதத்தை அடித்த பின்னர் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் அதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளர். இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' மூலம் வெளியேறினார்.

    அவர் 254 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து களம் இறங்கிய க்ரீன் 6 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி ஜோடி மேற்கொண்டு ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    இறுதியில் அந்த அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இதுவரை 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் ஹெட் 48 ரன்னுடனும், ஹேரி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்.
    • ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.

    ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி கிரீன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 68.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32 ரன்னுடனும் லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் தனது 25-வது டெஸ்ட் சதத்தையும், 45-வது சர்வதேச சதத்தையும் அடித்து, சமீபத்திய விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.

    100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். போட்டிக்கு முன், வார்னர் 71.20 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 45.52 சராசரியுடன் 7922 ரன்கள் எடுத்திருந்தார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இன்றைய போட்டியின் மூலம் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
    • தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 100-வது டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிகெட்டில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை வெகுசிலரே அந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கிரீன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 32 ரன்னில் களத்தில் உள்ளார்.

    இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 24 சதங்கள் அடங்கும்

    • தென் ஆப்பிரிக்கா 67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்திருந்தது.
    • ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.

    67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், அதற்கடுத்து வந்த யான்சன் மற்றும் வெரெய்னே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

    இந்த பாட்னர்ஷிப்பை கிரீன் பிரித்தார். இருவரும் அரை சதம் அடித்திருந்த நிலையில் கிரீன் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்கள் சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும், போலண்ட் மற்றும் லயன் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா களமிறங்கினர். 1 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மார்னஸ் லாபுசாக்னே - வார்னர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    • ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ம் தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்.

    மெல்போர்னில்... 1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென் ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.

    பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன்.
    • இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும்.

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி காபா மைதானத்தில் துவங்கிய வேளையில் போட்டியின் இரண்டாம் நாளே ஆட்டம் முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது.பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் ஆல் அவட்டானதால் ஆஸ்திரேலிய அணி தங்களது கடைசி இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி துவங்கி ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு போட்டி முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்த மைதானம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானமும் டெஸ்ட் போட்டியை நடத்த ஏதுவான மைதானம் கிடையாது என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் ஏல்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்துகள் கூட இங்கு நன்றாக பவுன்ஸ் ஆகி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும். ஒன்றரை நாட்களிலேயே 34 விக்கெட்டுகள் விழுந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. போட்டி ஆரம்பித்த உடனே முடிந்து விட்டது. இந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது? என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது மாதிரியான ஆடுகளத்தை நான் பார்த்ததே கிடையாது.

    என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ×