என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arrest warrant"
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி. இவர் மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் உரிமை மீறல் வழக்குகளை நடத்தி வந்ததாக கேணிக்கரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் புகாரின் பேரில், கடந்த 24.2.2015 தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும் மக்கள் கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனத்தின் மாவட்ட பொறுப்பாளராக மட்டுமே இருந்து வருவதாகவும் கந்தசாமி ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் சிறுநீரக கல்லடைப்பு நோயால் அவதிப்படுவதால், தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கந்தசாமி, ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் ராதாகிருஷ்ணன், கந்தசாமியை மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஆனால் போலீசார் நீதிமன்ற உத்தரவை மீறி கந்தசாமியை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக குற்றவியல் நடுவரிடம் கந்தசாமி புகார் செய்தார். இது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு கேணிக்கரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்.ஐ. கணேசலிங்க பாண்டியன், ஆயுதப்படை போலீசார் ரங்கராஜ், மதன்ராஜ் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தனும், எஸ்.ஐ. கணேசலிங்க பாண்டியனும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆயுதப்படை போலீசார் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி நிரவ் மோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ.) கண்டறிந்தது. அதாவது விலை உயர்ந்த வைரம் மற்றும் முத்துக்கள் இறக்குமதி மூலம் ரூ.52 கோடி அளவுக்கு அவர் சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
எனவே இது தொடர்பாக நிரவ் மோடி மற்றும் குஜராத்தின் சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அவரது 3 நிறுவனங்கள் மீது வருவாய் புலனாய்வுத்துறை அமைப்பு அதிகாரிகள் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், நிரவ் மோடி ஆஜராகவில்லை.
எனவே அவருக்கு எதிராக சூரத் கோர்ட்டு சமீபத்தில் கைது வாரண்டு பிறப்பித்தது. இந்த வாரண்டை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய நிரவ் மோடி, லண்டனில் உள்ள அவரது நகைக்கடை மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது குறித்து தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓல்டு பாண்ட் தெருவில் உள்ள ‘நிரவ் மோடி’ என்ற அவரது கடையின் மாடியில்தான் அவர் வசித்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ததற்கு பின்னர் கூட, இங்கிலாந்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் குறைந்தபட்சம் 4 முறை சென்று வந்திருப்பதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. #NiravModi #Email #PNBBank
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்