search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "armed police"

    • மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
    • காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றகூடிய அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களு க்குமாநகரகாவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் யோகா பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பணியாற்ற கூடிய காவ லர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட னர்.

    கோர்ட்டில் ஆஜராகாத ஆயுதப்படை போலீசார் 2 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி. இவர் மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் உரிமை மீறல் வழக்குகளை நடத்தி வந்ததாக கேணிக்கரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் புகாரின் பேரில், கடந்த 24.2.2015 தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும் மக்கள் கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனத்தின் மாவட்ட பொறுப்பாளராக மட்டுமே இருந்து வருவதாகவும் கந்தசாமி ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    மேலும் சிறுநீரக கல்லடைப்பு நோயால் அவதிப்படுவதால், தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கந்தசாமி, ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் ராதாகிருஷ்ணன், கந்தசாமியை மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆனால் போலீசார் நீதிமன்ற உத்தரவை மீறி கந்தசாமியை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக குற்றவியல் நடுவரிடம் கந்தசாமி புகார் செய்தார். இது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு கேணிக்கரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்.ஐ. கணேசலிங்க பாண்டியன், ஆயுதப்படை போலீசார் ரங்கராஜ், மதன்ராஜ் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தனும், எஸ்.ஐ. கணேசலிங்க பாண்டியனும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆயுதப்படை போலீசார் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×