search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Statue"

    • மதுரையில் 3 இடங்களில் அண்ணா சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினத்தையொட்டி கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள சிலைக்கு நாளை காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜன் செல்லப்பா

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினம் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    16 கால் மண்டபம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #PerarignarAnna #Anna #MKStalin
    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மலர் தூவினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

    எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், இ.கருணாநிதி, பெரிய கருப்பன், டி.ஆர்.பி. ராஜா, கே.எஸ்.ரவிச்சந்திரன், தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி, பல்லாவரம் ரஞ்சன்.

    கட்சி நிர்வாகிகள் துறைமுகம் காஜா, பூச்சிமுருகன், வி.எஸ்.ராஜ், ராமலிங்கம், அகஸ்டின், ஐ.கென்னடி, ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, மதன்மோகன், சேப்பாக்கம் பா.சிதம்பரம், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, சிற்றரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். #PerarignarAnna #Anna #MKStalin

    அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். #EdappadiPalaniswami #Paneerselvam #AnnaBirthDay
    சென்னை:

    அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளையொட்டி 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2018 முதல் 17.9.2018 வரை 3 நாட்கள், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நகரங்களிலும், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைத்து நிர்வாகிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொன்னேரியில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், காஞ்சீபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். 
    ×