என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » andal temple
நீங்கள் தேடியது "andal temple"
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்புத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி அதி காலை 5 மணிக்கு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆண் டாள் கோவில் முன்புள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செப்புத் தேரில் வைத்து நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்து கொள்ள திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரமும் இன்று ஆண்டாளுக்கு கொண்டு வரப்படுகிறது.
செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச் சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆண்டாள் கோவில் பட்டர்கள், வேத பிரான் பட்டர், ஸ்ரீராமுலு, அனந்த ராமகிருஷ்ணன் முத்து பட்டர், சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. ராஜா, நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி அதி காலை 5 மணிக்கு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆண் டாள் கோவில் முன்புள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செப்புத் தேரில் வைத்து நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்து கொள்ள திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரமும் இன்று ஆண்டாளுக்கு கொண்டு வரப்படுகிறது.
செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச் சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆண்டாள் கோவில் பட்டர்கள், வேத பிரான் பட்டர், ஸ்ரீராமுலு, அனந்த ராமகிருஷ்ணன் முத்து பட்டர், சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. ராஜா, நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆண்டாள் கோவில்குளம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench
மதுரை:
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான ஆண்டாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் திருமுக்குளம் என்ற பெயரில் உள்ளது. இந்த குளத்தில் தெப்பத்தேர் நடைபெறும். ஆனால் சமீபகாலமாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீராழி மண்டபத்தில் உள்ள பழமையான கல் மண்டபங்கள் சிதைந்துள்ளன. மேலும் திருப்பாற் கடல் குளத்தின் நடுப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், நீர் ஆதாரங்களையும், நீர் வழிப்பாதையையும் பாதுகாக்கும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கட்டுபாட்டில் உள்ள திருமுக்குளம் உள்ளிட்ட 4 குளங்களையும் சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான ஆண்டாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் திருமுக்குளம் என்ற பெயரில் உள்ளது. இந்த குளத்தில் தெப்பத்தேர் நடைபெறும். ஆனால் சமீபகாலமாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீராழி மண்டபத்தில் உள்ள பழமையான கல் மண்டபங்கள் சிதைந்துள்ளன. மேலும் திருப்பாற் கடல் குளத்தின் நடுப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், நீர் ஆதாரங்களையும், நீர் வழிப்பாதையையும் பாதுகாக்கும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கட்டுபாட்டில் உள்ள திருமுக்குளம் உள்ளிட்ட 4 குளங்களையும் சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X