search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adoption"

    இந்தியாவில் ஆயிரத்து 991 அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை தத்தெடுக்க சுமார் 20 ஆயிரம் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority
    புதுடெல்லி:

    பல்வேறு காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக காப்பகங்களிலும், கருணை இல்லங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்க்க குழந்தை பெற இயலா பெற்றோர்கள் பலர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவில் அனாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் மட்டும் ஆயிரத்து 991 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெண் குழந்தைகள் மட்டும் ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.



    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 376 குழந்தைகளும், ஒடிசாவில் 299 குழந்தைகளும் வளர்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவர்களை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரத்து 991 குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், குழந்தைகளை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் காத்திருப்பதாகவும், அதன்படி, 1 குழந்தைக்காக சுமார் 10 பெற்றோர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority 
    குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாக பெண் குழந்தைகளே தத்தெடுக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அதிலும் மகாராஷ்டிராதான் குழந்தைகள் தத்தெடுப்பில் முன்னணியில் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு 642 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 35 பெண் குழந்தைகளாகும். கர்நாடகா மாநிலத்தில் தத்து கொடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பெண் குழந்தைகள். 2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 1858 பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் 1418. 2016-2017-ம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட 3210 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 1915.

    இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தீபக்குமார் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். பெண்-ஆண் குழந்தைகள் தேர்ந்தெடுப்பு சதவீதம் 55:45 என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் குழந்தையை அதிகமாக தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும், கையாளுவதும் எளிதாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவே பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.
    ×