search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "zodiac"

    • எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்புகளை படிக்கலாம்? என்பது பற்றி பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்தார்.
    • கூடுதல் வெற்றி பெறலாம்.

    மதுரை

    எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொதுவாக மாணவர்கள் அவரவர் சொந்த விருப்பப் படியும், ஆர்வத்தின் அடிப் படையிலும் உயர் கல்விகள் தேர்ந்தெடுத்து படித்தால் அதிவேக முன்னேற்றம் அடையலாம். இருந்தாலும் அவர வர் ராசிப்படி ராசிக் கேற்ற குணங்கள், தன்மை அடிப்படையில் உயர் கல்வியை தேர்ந்ெதடுத்து படித்தால், மேலும் முன்னேற்றம் அடையலாம் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.

    அதன் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் கணிதம் எந்திரவியல் அரசியல் படிப்புகளையும், ரிஷப ராசியினர் கலை, இலக்கியம், ஜோதிடம் மருத்துவ துறையிலும், மிதுன ராசியினர் ஆசிரியர் பயிற்சி, பட்டய கணக்கு, ஆராய்ச்சி படிப்புகளையும், கடக ராசிக்காரர்கள் மருத்துவம், அறிவியல், நீர், கடல் சார்ந்த படிப்பு களை யும், சிம்ம ராசிக்காரர்கள் மின்னியல், சட்டம், அரசியல் சார்ந்த படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

    இதேபோல் கன்னி ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி , பட்டய கணக்கு, மனோ வியல் படிப்பு களையும், துலாம் ராசிக் காரர்கள் சட்டம் நீதித்துறை, வணிகம் சார்ந்த, படிப்பு களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் நெருப்பு, மின்னி யல், பாதுகாப்பு சம்பந்தப் பட்ட துறைகளையும், தனுசு ராசிக்காரர்கள் சித்த மருத்துவம், ஜோதிடம், மனோவியல் துறைகளையும், மகரம் ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி, கணிதம், அரசியல் சார்ந்த படிப்பு களையும், கும்ப ராசிக் காரர்கள் மின்னியல், எந்திரவியல் சார்ந்த படிப்பு களையும், மீன ராசிக் காரர்கள் கலைத்துறை அரசியல் அறிவியல் மருத்துவம் சார்ந்த படிப்பு களையும் தேர்ந்தெடுத்தால் கூடுதல் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக உள்ளன. எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.
    பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை

    மேஷம்-சிரசு,
    ரிஷபம்-வாய்,
    மிதுனம்-இரு கைகள்,
    கடகம்-மார்பு,
    சிம்மம்-வயிறு,
    கன்னி-இடை,
    துலாம்-புட்டங்கள்,
    விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள்,
    தனுசு-தொடை,
    மகரம்-முழங்கால்கள்,
    கும்பம்-காலின் கீழ்பகுதி,
    மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன.

    மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

    ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணையை பார்க்கலாம்.
    ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

    ராசி    - குலதெய்வம்

    மேஷம்    - மதுரைவீரன்
    ரிஷபம்    - ஐயனார்
    மிதுனம்    - காளியம்மன்
    கடகம்    - கருப்பன்னசாமி
    சிம்மம்    - வீரபத்திரன்
    கன்னி    - அங்காளம்மன்
    துலாம்    - முனீஸ்வரன்
    விருச்சிகம்    - பெரியாச்சி
    தனுசு    - மதுரைவீரன்
    மகரம்-    - ஐயனார்
    கும்பம்    - காளியம்மன
    மீனம்    - மதுரைவீரன்
    ×