search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens T20 Cricket"

    • இறுதி ஆட்டத்தி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி.
    • இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதன்முறையாக இடம் பெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். தீப்தி சர்மா 13 ரன்னும், சபாலிவர்மா 11 ரன்னும் அடித்தனர். 19.3 ஓவர் முடிவில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

    இதையடுதது 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர்.

    20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது. இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. #WomensCricket #AsiaCup #India
    கோலாலம்பூர்:

    ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது.

    முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுத்தது. மோனா மேஸ்ரம் 32 ரன்னும், கம்ரிதா மந்தனா 29 ரன்னும் கேப்டன் கவூர் 17 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய தாய்லாந்து அணியால் இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ரன்னே எடுக்க முடிந்தது.

    இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 2-வது வெற்றியாகும்.

    கவூர் 3 விக்கெட்டும், தீபதி சர்மா 2 விக்கெட்டும், பூஜா, பூமை யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கை- மலேசியா மோதும் ஆட்டம் பிற்பகலில் நடக்கிறது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. நாளை ஒய்வு நாளாகும்.#WomensCricket #AsiaCup #India
    ×