search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman attacked"

    • அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.
    • வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் ெஜ.ஜெ. நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 65). இவருக்கும் இவரது வீட்டின் எதிரில் வசிக்கும் பிரேம்தாஸ் என்பவர் வீட்டிற்கு வந்து செல்லும் வயல்வெளியை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.

    சம்பவத்தன்று தமிழ்செ ல்வியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அஸ்வின் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.

    இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரெட்டியா ர்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.

    மரத்தை வெட்டிய தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சின்ன சேமகோட்டை பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 62), விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்து (51).

    கலியன் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது முத்துவீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தை வெட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கலியன் மனைவி சின்னபாப்பா (60) என்பவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து, அவரது மகன் ராமராஜன் (27), அவரது மனைவி தைலம்மாள் (25) ஆகியோர் எப்படி எங்கள் மரத்தை வெட்டலாம் என்று கூறி சின்னபாப்பாவிடம் தகராறு செய்தனர். 

    பின்பு அவரை ஆபாசமாக பேசி உருட்டுகட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சின்னபாப்பா கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து சின்னபாப்பா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய முத்து அவரது மகன் ராமராஜன் ஆகியோரை கைது செய்தார்.
    குருபரப்பள்ளி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிப்பாறையை சேர்ந்த பெரியண்ணன் மனைவி வேடியம்மாள்(30).  இந்நிலையில் இவரது உறவினரான டிரைவர் பெரியசாமி(38) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 

    இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஏற்பட்ட நிலதகராறில், வேடியம்மாளை, பெரியசாமி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த வேடியம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸ் எஸ்எஸ்ஐ சிவக்குமார் வழக்குபதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார்.
    ×