search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare benefits"

    • வ.உ.சி.பேரவை நிறுவன தலைவர் அன்னலட்சுமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
    • பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

    மதுரை

    தென் மாவட்ட வ.உ.சி பேரவை நிறுவனத் தலைவரும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆட்டோ கணேசன் மகள் அன்னலட்சுமியின் பிறந்த நாள் விழா மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வேளாளர் திருமண மகாலில் நாளை (2-ந் தேதி) நடக்கிறது.

    இதையொட்டி காலை 9 மணிக்கு சிம்மக்கல்லில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    காலை 11 மணியளவில் மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வேளாளர் வெள்ளாளர் சமுதாயத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • இந்த முகாமை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்

    திருப்பரங்குன்றம்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து நடந்த ரத்த தான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், ராஜ்குமார் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பகுதி தலைவர் நாகேசு வரன், வட்டார தலைவர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் முத்து வேல், சவுந்தர பாண்டி, வித்யாபதி, சத்யன், சரவணபவன், தங்க ராஜா, பழனிகுமார், மலைராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்- மருத்துவ முகாம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    திருமங்கலம்

    தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட முத்தப்பன் பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் 70 அடி கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னார்.

    இதனைத் தொடர்ந்து முத்தப்பன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து டி. குன்னத்தூரில் மதுரை தனியார் மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் மணி மாறன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நல்ல மரம் கிராமத்தில் நடை பெற்ற மருத்துவ முகாமை யும் தொடங்கி வைத்தார்

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நாகராஜ், தனசேகரன், சண்முகம், மதன்குமார் மற்றும் மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் பாண்டி முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
    • இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.

    வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் புவனேசுவரி ராஜசேகர், அரசு வழக்கறிஞர் சிவராஜா நீதி மன்னன், ஏசு சாமுவேல், இளைஞர் அணி சாரதி, அவனியாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பில் பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளின் குறைகளை களைவதற்காக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவின் பால்உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்காக ரூ.1லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டிலான நிதியுதவியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பீட்டிலான பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    அதேபோன்று 2 மாற்றுத்தி றனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 792 மதிப்பீட்டிலான மோட்டர் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் ரூ.19 ஆயிரத்து 584 மதிப்பீட்டிலும், ஒரு மாற்றத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 633 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குடியரசு தின விழாவில் 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நல உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #RepublicDay
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் கொடியேற்றினார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் சிவஞானம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விருதுநகர் தனிப்பிரிவு ஏட்டு கண்ணன் உள்பட 114 காவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். 70 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    இதே போல் சிறப்பாக பணியாற்றிய 102 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    முன்னதாக விழாவுக்கு வந்த கலெக்டரை, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.

    விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    தேசபந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் நீதிபதி பரிமளா கொடியேற்றினார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன. #tamilnews
    ×