search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். அருகில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் உள்ளார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பில் பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளின் குறைகளை களைவதற்காக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவின் பால்உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்காக ரூ.1லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டிலான நிதியுதவியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பீட்டிலான பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    அதேபோன்று 2 மாற்றுத்தி றனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 792 மதிப்பீட்டிலான மோட்டர் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் ரூ.19 ஆயிரத்து 584 மதிப்பீட்டிலும், ஒரு மாற்றத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 633 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×