search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Vada"

    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - 1 கப்,
    பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.

    அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோஸ் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உளுந்து, கடலைப்பருப்பு, பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வேர்க்கடலையை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    வெங்காயம் - ஒன்று,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறிய வேர்கடலையை நீரை பிழிந்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வேர்க்கடலை விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதம் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை வடை ரெடி.

    தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. பச்சை பட்டாணியில் வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை கப்),
    கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 4,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி, சோம்பு, சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் கடலை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினா, சூடான எண்ணெய் 1 டீஸ்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பச்சை பட்டாணி வடை ரெடி.

    குறிப்பு - இந்த வடைக்கு மாவு அரைக்கும் போது கொரகொரப்பாக அரைத்தால் தான் மொறுமொறு என்று சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×