search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vk pudur"

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை அருகில் உள்ள வீராணத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகள் சங்கீதா (வயது 20). இவரை காணவில்லை என கிருஷ்ணன் வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி புகார் கொடுத்தார். 

    இந்நிலையில் நேற்று வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் சங்கீதா, மதுரை ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் மணக்கோலத்தில் தஞ்சமடைந்தார். அப்போது சங்கீதா ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது ஆலங்குளத்தில் இருந்து கல்லூரிக்கு பாலகிருஷ்ணன் ஆட்டோவில் செல்லும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இதையடுத்து மதுரை அழகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினர்.

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் சத்யவேந்தன், சங்கீதாவின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசினார். ஆனால் திருமணத்தை ஏற்க சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். பெண்ணுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருவருக்கும் திருமண வயதை தாண்டியதால் சங்கீதாவை, அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சுரண்டை அருகே வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் மெயின் ரோட்டில் தாசில்தார் நல்லையா ஆய்விற்காக சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த டிராக்டரை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி சரள் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார் அரசு விதிப்படி நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    நேற்று அதிகாலை 6 மணியளவில் வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி வெள்ளை நிற நீள கல் கடத்துவதாக தகவல் வந்ததையடுத்து தாசில்தார் நல்லையா தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டு டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மாரியப்பன் மகன் பாண்டி (வயது 25) என்பவரிடம் விசாரித்த போது அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரணி பகுதியிலிருந்து கனிம வள சட்டத்திற்கு எதிராக வெள்ளை நிற நீள கற்களை அளவுக்கு அதிகமாக கடத்தி வந்ததும், சோதனை நடந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனுமதியில்லை என்பதும் தெரிய வந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கைக்கு உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    தொடர்ந்து நேற்று பகல் ஒரு மணியளவில் பரன்குன்றாபுரம் விலக்கு அருகே சோதனையில் ஈடுபட்ட போது வந்த லாரியை மடக்கி டிரைவர் சிங்கிலிப்பட்டியை சேர்ந்த கருத்தசாமி மகன் திருமலைச்சாமி (40) யிடம் விசாரித்த போது பாளையங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு குறுமணல் 2 யூனிட் கொண்டு செல்ல உரிமை சீட்டு வைத்திருந்ததும் ஆனால் அதில் 4 யூனிட் மணல் கடத்தப்பட்டதும் தெரியவந்ததையடுத்து லாரியை பறிமுதல் செய்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    ஏற்கனவே பாளையங்கோட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுத்த தாசில்தார் நல்லையா வீ.கே.புதூர் பகுதியில் மணல், வண்டல், சரள், நீளக்கல், குண்டுக்கல், கருவேல மரங்களை கடத்திய 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் இப்பகுதியில் கனிமவளங்களை கடத்துவது குறைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    ×