search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK parliament"

    • 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில்,
    • 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.

    பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.

    2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில் 2022-ம் ஆண்டு 45774 ஆக உயர்ந்தது.

    இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ரிஷி சுனக் இதில் உறுதியாக இருந்தார்.

    பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்ததாலும், இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புதற்கும் இங்கிலாந்து அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது. அதனால் கடந்த வருடம் இங்கிலாந்துக்கு வருபோரின் எண்ணிக்கை 29,437 என குறைந்தது.

    இந்த நிலையில் குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவேண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை, வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வரும் நபரை கட்டுப்படுத்தும் வகையிலான மசோதா தடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரை பாராளுமன்றம் நடைபெறும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம் இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் (ஜூன்) சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் ருவேண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அரசாங்கம் ஏற்கனவே நாடுகடத்தல் விமானங்களுக்கு வாடக விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்களை பணியமர்த்தியுள்ளது. மேல்முறையீடுகளை கையாள நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

    • இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளது
    • சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.

    கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.

    இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

    பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும்.

    அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்கான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இங்கிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாயில், உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    பிரிட்டனில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #DraftBrexitAgreement #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை (பிரெக்சிட்) ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வந்தது.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு, பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்துள்ளார்.



    இந்த வரைவு ஒப்பந்தத்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதிருப்தி அடைந்த பலர் பதவி விலகினர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    இந்நிலையில், தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு ஒப்பந்தம் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் ஆளுங்கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்றால், தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்பிக்கள் கடிதம் கொடுக்க வேண்டும். இதில் ஏற்கனவே பெரும்பாலான எம்பிக்கள் கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த தீர்மானம் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தெரிகிறது. #DraftBrexitAgreement #TheresaMay
    ×