search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRADER KILLED"

    • ராஜசேகர்,சக்திவேல் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்
    • பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் (45). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் - புதுவை 4 வழிச்சாலையில் காட்ராம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களுக்கு முன்னால் சவுக்கு கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எடை போடுவதற்காக எடைமேடைக்கு திரும்பியது. இதனை எதிர்பாராத சக்திவேல் நிலைதடுமாறி, மோட்டார் சைக்கிளுடன் லாரி மீது மோதினார்.

    விபத்தில் ராஜசேகர், சக்திவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், பலத்த காயமடைந்த சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் இன்ஸ்பெ க்டர் பாலமுரளி மற்றும் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
    • தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு:

    நிலக்கோட்டை அருகே சத்திரம் தெருவை சேர்ந்தவர் பத்திரிநாராயணன் (42). இவர் சோப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது சின்னாளபட்டி கோட்டைபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் தலையில் படுகாயமடைந்த பத்திரி நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் சோலைச்சேரி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது54) இவர் ராஜபாளையம் -தென்காசி சாலையில் சித்தாபுரம் விலக்கு பகுதியில் மாட்டு தீவனம் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரோட்டில் நடந்து சென்றார். அவர் சேத்தூர் புறக்காவல் நிலையம் முன்பு வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் மாரியப்பனும், மோட்டார் சைக்கிளில் வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்த கற்பகராஜ்(30)என்ற வாலிபரும் படுகாயம் அடைந்தனர்.

    மாரியப்பனை சேத்தூர் போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கற்பக ராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாகன விபத்தில் வியாபாரி பலியானார்.
    • வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, வசிஷ்டபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் திட்டக்குடி பஸ் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொய்யாப்பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வேல்விழி(30). இவர்களுக்கு அஸ்வின்(10), சஸ்வின்(6) என்ற இருமகன்களும், சுபிக்சா(3) என்ற மகளும் உள்ளனர். இவர் வழக்கமாக விழுப்புரத்திற்கு சென்று கொய்யாப்பழங்களை மொத்த விலையில் வாங்கி வந்து விற்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லிக்காய் மற்றும் விளாம்பழம் மொத்த விலையில் வாங்குவதற்காக பாபு தனது மனைவியிடம் ரூ.2,500-ஐ வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு செல்லும் வழியில் பெரம்பலூர் வந்துவிட்டு, கலெக்டர் அலுவலக சாலைவழியாக திருச்சி-சென்னை நான்குவழிச்சாலையில் துறைமங்கலம் ஏரிக்கரை அருகே திருச்சியை நோக்கி யூ வளைவில் திரும்புவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாபுவின் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாபு ரத்தம் சொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்விழி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    ×