search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் பைக் மோதி வியாபாரி பலி
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல்லில் பைக் மோதி வியாபாரி பலி

    • சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
    • தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு:

    நிலக்கோட்டை அருகே சத்திரம் தெருவை சேர்ந்தவர் பத்திரிநாராயணன் (42). இவர் சோப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது சின்னாளபட்டி கோட்டைபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் தலையில் படுகாயமடைந்த பத்திரி நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×