என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
- ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார்.
- இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் சோலைச்சேரி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது54) இவர் ராஜபாளையம் -தென்காசி சாலையில் சித்தாபுரம் விலக்கு பகுதியில் மாட்டு தீவனம் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரோட்டில் நடந்து சென்றார். அவர் சேத்தூர் புறக்காவல் நிலையம் முன்பு வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் மாரியப்பனும், மோட்டார் சைக்கிளில் வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்த கற்பகராஜ்(30)என்ற வாலிபரும் படுகாயம் அடைந்தனர்.
மாரியப்பனை சேத்தூர் போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கற்பக ராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்