search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri chakra"

    • மஹா மேருவின் மையப் பகுதியில் பிரணவ ரூபத்தில் அம்பிகை உள்ளாள்.
    • 43 முக்கோணத்தில் 64 தத்துவங்கள் அடங்கியுள்ளது.

    அம்பிகையின் அருவுருவ நிலையான மேரு ஸ்ரீசக்ரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    புருஷ ரூப சக்தி 32-ம் சக்தி ரூப பகுதி 32-ம் ஒன்றேடொன்று இணைவதால் 43 முக்கோணமும், பிந்துவும் வெளியில் தெரிகின்றது. மற்ற கோணங்கள் உள்ளே மறைந்து விடுகின்றது.

    இந்த 43 முக்கோணத்தில் 64 தத்துவங்கள் அடங்கியுள்ளது.

    இதன் அடிப்படையிலேயே பரதக் கலையில் 64 அபிநயமும் இசையில் 64 ராகமும் சிற்ப சாஸ்திரத்தில் 64 பாவமும் தேரின் கால்கள் 64-ம் அம்பிகை அமரும் தாமரை மலரின் 64 இதழ்களும் நம் பெண்டிர் அணியும் திருமாங்கல்யத்தில் 64 துண்டுகள் இணைத்தலும் வழக்கில் உள்ளது.

    ரத்தினத்திலும் 64 பட்டை தீட்டப்பட்டதே இதன் அடிப்படையில் ஆகும்.

    மேருவின் மையப் பகுதியில் பிரணவ ரூபத்தில் அம்பிகை உள்ளாள். மேரு அர்த்த மேரு, மகா மேரு என இரு வகைப்படும்.

    அர்த்த மேரு என்றால் பாதி அல்லது அகலத்தில் பாதி உயரமாகக் கொண்டு அமைப்பதாகும்.

    இதில் இரு வகையுண்டு. ஒன்று அகலத்தில் பாதி உயரம் வரை 43 முக்கோணங்களையும் படிப்படியாக அமைத்தல், மற்றொன்று அகலத்தில் பாதியளவு உயரம் வரை வைத்து பின் மேற் பகுதியில் ஸ்ரீசக்ரத்தினை வரைவதாகும்.

    அகலமும் உயரமும் ஒரே அளவில் அமைந்து விளங்குவது ஸ்ரீமகா மேரு ஆகும். கருணைக் கடலாகிய அன்னையின் அருவுருவமே மேரு ஆகும்.

    இதனை முறைப்படி தயாரித்து வழிபடுவதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். இகத்தில் சுகமும் பரத்தில் அமைதியும் பெறலாம்.

    இத்தகைய பெருமை வாய்க்கப் பெற்ற ஸ்ரீசக்ரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார்.

    காஞ்சி காமாட்சியம்மன் பாதத்தில், குற்றாலத்தில் ஸ்ரீசங்கர மடத்தில், ஆவுடையார் கோவில் மூல ஸ்தானத்தில் சென்னை ஸ்ரீகாளிகாம்பாள ஆலய மூல ஸ்தானத்தில் இன்றும் அவைகளைக் காணலாம்.

    கிண்ணித் தேர் தவிர, ஸ்ரீஅம்பாள் வெளிப் பிரகார மண்டபத்தில் பிரதட்சணம் வர, 125 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகள் பதித்த வெள்ளி ரதம் அமைக்கப்பட்டு 2.3.1995 அன்று வெள்ளோட்ட விழா செய்யப் பெற்றது.

    பக்தர்கள் இன்றளவும் கட்டணம் செலுத்தி, வெள்ளித் தேர் உற்சவம் நடத்தி அம்பாளை வழிபட்டு மகிழ்கின்றனர்.

    சீரோங்கு சென்னையில் பாரோங்கும் பலகோவில்

    சாரோங்கு காளிக்கோட்டம் கதிர்மதி தொழும்கோட்டம்

    ஊரோங்கும் ஒரு கோவில் உயர்விஸ்வகர்மர் கோவில்

    தேரோங்கும் ஸ்ரீசக்ரம்திகழ் திருக்காளிகாம்பாள் திருக்கோவில்.

    காளிகாம்பாளைத் தொழுதால் கன்னியர் மணம்முடிப்பர்

    காளையர் வேலைபெற்று இல்லறம் சிறக்க வாழ்வர்

    நூலையும் கற்பர் சிறுவர் நுண்கலை பயிர்வார் சிற்பி

    காளிதாளையே பற்றினார்கள் தனியரசாள்வர் தாமே

    புவியினில் பிறந்தோர் வாழ புண்ணியச் செயல்கள்தேவை

    தவித்திடும் ஏழைகட்கு தண்ணீரை வார்க்க வேண்டும்

    பசித்திடும் பாமரர்க்கு பாலன்னம் கொடுக்க வேண்டும்

    வலித்திடும் நோயினார்க்கு வளமான வார்த்தை வேண்டும்

    இனித்திடும் காளிகாம்பாள் இவையெல்லாம் ஈவாள் வாழ்க!

    தனித்திரு மனமே நித்தம் தாய்தினம் நம்மைக் காப்பாள்

    பணிந்திடு பரவி வாழ்த்து பதமலர் பற்றிக் கொள்வாய்

    கனிந்திடு கல்நெஞ்சத்தை கரைந்துநில்

    • ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் வியாதிகள் விலகி மன அமைதி, வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.
    • சக்கர பிரதிஷ்டை வருகிற 12-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    பொள்ளாச்சியை அடுத்த அங்கலகுறிச்சி தாடகைமலை அடிவாரத்தில் உள்ள ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகையம்மன், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோர் தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

    இதையடுத்து நவக்கிரம ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு மகாசங்கல்பம், புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீசக்ர கலச ஆவாசனம், மூல மந்திர வேதபாராயணம், வாஸ்து சாந்தி, வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.

    ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் வியாதிகள் விலகி மன அமைதி, வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். அத்தகைய சக்கர பிரதிஷ்டை வருகிற 12-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ சுக்ர தேவியின் மூல மந்திரம், 1 லட்சம் முறை ஜப பாராயணம், 10 ஆயிரம் முறை மூல மந்திர மகா யாகம், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம்.

    இந்த ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.

    * பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

    * கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    * புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

    * ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    * சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.

    * திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

    * கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்கரமே. 
    ×