search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shutter"

    • கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார்.
    • ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார்.

    இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ரோண்டா சைனான் டாப்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு 72 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார். இதை கவனிக்காமல் அந்த மூதாட்டி ஷட்டரை ஒட்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடை மின்சார ஷட்டரில் சிக்கிக்கொண்டது.

    இதனால் ஷட்டர் மேலே திறந்த போது, ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார். இதை அங்கு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஷட்டரில் ஆடை சிக்கி தலைகீழாக தொங்கிய மூதாட்டியை மீட்டு பத்திரமாக தரையில் இறக்கி விட்டார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 12 வினாடிகள் கொண்ட அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அவினாசி : 

    அவினாசிநல்லாற்றில் சாலையப் பாறையம் பகுதியில் தடுப்பணை உள்ளது. மழைகாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுப்பணையில் நிரம்பும் தண்ணீரை திறந்துவிட மதகில் ஷட்டர்கள் உள்ளன. அந்த மதகில் ஷட்டர் கியர் உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. ஷட்டர் கியர், தண்ணீரை திறந்துவிட பயன்படும் .'இந்த நிலையில் அங்கு நான்கு ஷட்டர்களில் இருந்த கியர் உபகரணத்தையாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பொதுப்பணித்துறையினர் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற ஊழியர் இன்று கடையை திறக்க வந்த போது ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை ரெட்டியார்பட்டி பால் பண்ணை சிவசக்தி நகரை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி ராமபிரபா (வயது 35). இவர்கள் வண்ணார்பேட்டை தெற்கு பை-பாஸ் சாலையில் குறிச்சி சிக்னல் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றனர்.

    கடை ஊழியர் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்றார். இன்று காலை அவர் கடையை திறக்க வந்த போது ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் ஷட்டரின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதுகுறித்து அவர் ராம பிரபாவுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த அவர் இதுபற்றி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கடைக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×