search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shakila"

    • சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".
    • இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.

    இயக்குனர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்". இந்த படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.


    சாய் ராம் ஏவிஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் எஸ்.பி.எம். பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைக்க பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது, என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய விஜயகாந்திற்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது.


    சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.

    • கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷகீலா.
    • இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மலையாள திரையுலகில் கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் 1990-ம் ஆண்டுகளில் இவர் நடித்து வெளியான படங்கள், அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஓடி வசூலை அள்ளி குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கவர்ச்சியாக நடித்து கலக்கியதால் இவரது படத்திற்கு செல்ல இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஷகீலா நடித்த படங்கள் திரைக்கு வர திரையுலகம் மறைமுக தடை விதித்தது. அதன்பின்பு நடிகை ஷகீலாவுக்கு பட வாய்ப்புகள் குறைய அவர் சினிமாவில் இருந்து சிறிது விலகியிருந்தார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்தார். இதன் மூலம் நடிகை ஷகீலாவுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்க அவரை மலையாள திரையுலகம் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

     

    ஷகீலா

    ஷகீலா

    அந்த வகையில் ஒமர் லூலுவின் நல்ல சமயம் என்ற மலையாள படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். கோழிக்கோட்டிற்கு நடிகை ஷகீலா வருவதாக கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விழாவில் பங்கேற்கவும், நடிகை ஷகீலாவை காணவும் ஏராளமான ரசிகர்கள் வர இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் சினிமா அறிமுக விழா நடக்க இருந்த வணிக வளாகம் விழாவில் நடிகை ஷகீலா பங்கேற்க கூடாது என்று தடை விதித்தது. நடிகை ஷகீலா இல்லாமல் விழாவை நடத்தி கொள்ளுங்கள் என்று படக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஷகீலா இல்லாமல் விழா நடைபெறாது என படக்குழு முடிவெடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

     

    ஷகீலா

    ஷகீலா

    அதில் ஒமர் லூலு பேசியதாவது, நடிகை ஷகீலா இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என நாங்கள் முடிவு செய்தோம். எனவே சினிமா அறிமுக விழாவையே ரத்து செய்துவிட்டோம் என்றார்.

    நடிகை ஷகீலா கூறியதாவது, சினிமா துறையில் இதுபோன்ற அவமானங்களை பலமுறை சந்தித்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இம்முறை கோழிக்கோடு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தேன். எனது ரசிகர்களும் என்னை பார்க்க ஆர்வமாக இருந்தனர். நிகழ்ச்சிக்கு என்னை வரக்கூடாது என்று கூறியது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

    மலையாள பட உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலா, கமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆர்வம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Kamal #Shakila
    மலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.

    தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து ஷகிலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. 15-வது வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். 



    குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன். நான் கமல்ஹாசன் ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது.”

    இவ்வாறு ஷகிலா கூறியுள்ளார்.
    மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான ஷகிலாவின் படம் வெளியாக இருக்கும் நிலையில், தணிக்கை குழு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Shakila
    ஒரு காலத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அவர்கள் படங்களை வசூலில் ஷகிலாவின் படங்கள் பின்னுக்கு தள்ளின.

    ஷகிலா படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழிந்ததால் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த சம்பவங்களும் நடந்தன. ஷகிலாவின் ஆபாச படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன. பின்னர் அவர் சென்னைக்கு வந்து தமிழில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள ‘சீலாவதி’ என்ற திகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

    இந்த படத்தை ஸ்ரீராம் தாசரி டைரக்டு செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கேரளாவில் நடந்த சில பாலியல் குற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.



    இந்த நிலையில் சீலாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்து திடீர் தடை விதித்து உள்ளது. படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தணிக்கை குழுவை ஷகிலா கண்டித்துள்ளார். “படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழு தடை விதித்து இருக்கிறது. இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” என்று அவர் கூறினார். 
    ×