search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷகீலா"

    • சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".
    • இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.

    இயக்குனர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்". இந்த படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.


    சாய் ராம் ஏவிஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் எஸ்.பி.எம். பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைக்க பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது, என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய விஜயகாந்திற்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது.


    சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.

    • சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார்.
    • ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

    கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வரும் ஷகீலா அவரது அண்ணன் மகள் ஷீத்தலை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஷீத்தல், ஷகீலாவை தாக்கி விட்டு சென்றுள்ளார்.

    இதுதொடர்பாக சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து ஷீத்தலின் தாயார் சசி, அக்கா ஜமீலா ஆகியோர் ஷகீலாவின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.

    அப்போது சமாதானம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சவுந்தர்யாவை ஷீத்தல் தாக்கியுள்ளார். ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    இதுபற்றி சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஷீத்தல், அவரது தாயார் சசி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷகீலா.
    • இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மலையாள திரையுலகில் கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் 1990-ம் ஆண்டுகளில் இவர் நடித்து வெளியான படங்கள், அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஓடி வசூலை அள்ளி குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கவர்ச்சியாக நடித்து கலக்கியதால் இவரது படத்திற்கு செல்ல இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஷகீலா நடித்த படங்கள் திரைக்கு வர திரையுலகம் மறைமுக தடை விதித்தது. அதன்பின்பு நடிகை ஷகீலாவுக்கு பட வாய்ப்புகள் குறைய அவர் சினிமாவில் இருந்து சிறிது விலகியிருந்தார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்தார். இதன் மூலம் நடிகை ஷகீலாவுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்க அவரை மலையாள திரையுலகம் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

     

    ஷகீலா

    ஷகீலா

    அந்த வகையில் ஒமர் லூலுவின் நல்ல சமயம் என்ற மலையாள படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். கோழிக்கோட்டிற்கு நடிகை ஷகீலா வருவதாக கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விழாவில் பங்கேற்கவும், நடிகை ஷகீலாவை காணவும் ஏராளமான ரசிகர்கள் வர இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் சினிமா அறிமுக விழா நடக்க இருந்த வணிக வளாகம் விழாவில் நடிகை ஷகீலா பங்கேற்க கூடாது என்று தடை விதித்தது. நடிகை ஷகீலா இல்லாமல் விழாவை நடத்தி கொள்ளுங்கள் என்று படக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஷகீலா இல்லாமல் விழா நடைபெறாது என படக்குழு முடிவெடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

     

    ஷகீலா

    ஷகீலா

    அதில் ஒமர் லூலு பேசியதாவது, நடிகை ஷகீலா இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என நாங்கள் முடிவு செய்தோம். எனவே சினிமா அறிமுக விழாவையே ரத்து செய்துவிட்டோம் என்றார்.

    நடிகை ஷகீலா கூறியதாவது, சினிமா துறையில் இதுபோன்ற அவமானங்களை பலமுறை சந்தித்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இம்முறை கோழிக்கோடு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தேன். எனது ரசிகர்களும் என்னை பார்க்க ஆர்வமாக இருந்தனர். நிகழ்ச்சிக்கு என்னை வரக்கூடாது என்று கூறியது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

    ×