search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem murder"

    சேலத்தில் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பாபு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார். இவருக்கு பெருமாயி, மாதம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். மாதம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாயிக்கு குழந்தைகள் இல்லை.

    ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர் ஏதாவது பாட்டு பாடிக் கொண்டே இருப்பார். வழக்கம்போல நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து பாட்டுப் பாடி கொண்டிருந்தார்.

    ஆறுமுகம் பாட்டு பாடியது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் முரளிக்கு (வயது 29)எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் முரளி ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று எனது மனைவியை பார்த்து தான் நீ பாட்டு பாடுகிறாய் என்று கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த முரளி, அவரது தம்பி சரவணன், தாய் மாதம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மகன்கள் தகராறை விலக்கிவிட்டு விட்டு தூங்க சென்றனர். காலையில் ஆறுமுகத்தை மனைவி எழுப்பிய போது அவர் இறந்து கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவரை தாக்கிய முரளி உள்பட 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேலத்தில் கோவில் பூசாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டி, வலசையூர் காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சுந்தர்ராஜன் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். பிரியா திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

    பாஸ்கர் நெசவு தொழில் செய்து வந்தார். மேலும் இவர் வீட்டின் எதிரே சிறிய காளியம்மன் கோவில் ஒன்றை கட்டி அதில் பூசாரியாக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி சென்ற பாஸ்கர் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை.

    இதனால் அவரது மனைவி பத்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் பாஸ்கரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் வீட்டின் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் அருகில் இருக்கும் காலி இடத்தில் பாஸ்கர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கழுத்து பகுதியில் சுமார் 4 சென்டி மீட்டர் அளவுக்கு அறுக்கப்பட்டு இருந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீராணம் போலீசாருக்கும், அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.

    உடனே பத்மா மற்றும் அவரது உறவினர்களும், வீராணம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் பாஸ்கரை கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    அங்கு கொலையுண்டு கிடந்த தனது கணவர் உடலை பார்த்து பத்மா கதறி அழுதார். இதனை தொடர்ந்து போலீசார் பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தபோது பாஸ்கருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, நல்ல மனிதர் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து பத்மா மற்றும் அவரது உறவினர்களிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பாஸ்கர் வெளியே போயி விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். எங்கே போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. எனவே இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றனர்.

    மேலும் போலீசார் விசாரிக்கையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    சுந்தர்ராஜன் காலனியில் பாஸ்கர் மற்றும் அப்பகுதி மக்கள் எல்லோரும் சேர்ந்து காளியம்மன் கோவிலை கட்டியுள்ளனர். பின்னர் நாளடைவில் பொதுமக்கள் கோவில் நிர்வாக பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தனர்.

    மேலும் பாஸ்கர் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்தார். சீட்டு ஒரு மாதம் உறுப்பினர்களால் கட்ட முடியவில்லை என்றாலும் அவர்களிடம் பணத்தை கொடுங்கள் என்று நிர்பந்திக்க மாட்டார். மறுமாதம் அந்த பணத்தை சேர்த்து வாங்குவார்.

    இந்த சீட்டில் வரும் லாபத்தை கொண்டு, கோவிலில் திருவிழாவும் நடத்தி வந்தார். இது தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பொதுமக்களிடம் பணம் பிரித்து கோவில் கட்டியதால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சீட்டு பணம் கட்டுவதில் பெண்களிடம் பேசுவார். இது தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி பாஸ்கர் சம்பவத்தன்று இரவு எதற்காக வெளியே சென்றார்? அவரை வெளியே வருமாறு அழைத்தவர்கள் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    தமிழக அரசு கொடுத்த ஒரு பவுன் காசுக்காக ஏற்பட்ட பிரச்சனையில் கணவரே 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ராஜவேலு (வயது 22). தறி தொழிலாளி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி திருமணம் நடந்தது. புவனேஸ்வரி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 22-ந் தேதி காலை கணவர் வீட்டில் மர்மமான முறையில் புவனேஸ்வரி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உறவினர்களிடம் ராஜவேலு, புவனேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறினார். புவனேஸ்வரி உடலில் பல இடங்களில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜவேலுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்பட்ட தங்க காசை புவனேஸ்வரியின் தாய் சந்தியா கொண்டு சென்றதால் ஏற்பட்ட தகராறில் ராஜவேலு, புவனேஸ்வரியை கொன்று விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவர் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:-

    திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ் புவனேஸ்வரிக்கு 50 ஆயிரம் ரொக்கப்பணமும், 1 பவுன் காசும் அரசு வழங்கியது. இதனை கடந்த 19-ந்தேதி எனது தந்தை சண்முகமும், மாமியார் சந்தியாவும் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாங்கி வந்தனர்.

    ஆனால் அந்த தங்ககாசை என்னிடம் தராமல் எனது மாமியார் கொண்டு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அதனை வாங்கி வருமாறு எனது மனைவியை அனுப்பினேன். அப்போது தங்க காசை வாங்காமல் திரும்பி வந்தாள், ஏன் தங்க காசை வாங்கி வரவில்லை என கேட்டதற்கும் சரியான பதில் சொல்லவில்லை.

    இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே கடந்த 22-ந் தேதி தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் அவரை அடித்ததுடன் பிடித்து கீழே தள்ளினேன். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்தாள்.

    பின்னர் அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவளது முகத்தில் வைத்து அமுக்கினேன். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தில் இருந்த தாலி கயிற்றோடு சேர்த்து இருக்கினேன். தாலி கயிறு அறுந்து விட்டதால் அருகில் கிடந்த கயிற்றை எடுத்து கழுத்தில் போட்டு மீண்டும் இறுக்கி கொன்றேன்.

    பின்னர் உறவினர்களிடம் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாகவும், தற்போது அவரது உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினேன். ஆனால் தூக்கு போட்டதற்கானை அடையாளம் இல்லை என்றும், உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகப்பட்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் போலீசாரிடம் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ராஜவேலுவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். அரசு கொடுத்த ஒரு பவுன் காசுக்காக ஏற்பட்ட பிரச்சனையில் கணவரே 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக தொழிலாளியை உறவினர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 50). இவர் மாதையன் குட்டையில் உள்ள கனிமவளத்துறை குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மயில்சாமிக்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் கோபம் அடைந்த உறவினர்கள் மரக்கட்டையால் மயல்சாமியின் தலையில் ஓங்கி அடித்தனர். மேலும் இடுப்பு, கை, கால்களையும் அடித்து உதைத்தனர். இதில் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மயில்சாமிக்கு சொந்தமாக ஆடுகள், மாடுகள் மற்றும் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உறவினர்கள் வளர்த்து வரும் கால்நடைகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி, நிலம் தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த முன்விரோதம் காரணமாகவே மயில்சாமி அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையில் 4 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இவர்கள் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக தப்பி ஓடி விட்டனர். கொளத்தூர் அருகே உள்ள பாலாற்றை தாண்டினால் கர்நாடக மாநில எல்லை வந்து விடும். மலைகள் சூழ்ந்துள்ள இந்த எல்லையில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. அதுபோல் காவிரி ஆற்றின் மறுகரைக்கு சென்றால் தர்மபுரி மாவட்டம் வந்து விடும். இந்த எல்லைப் பகுதிகளில் கொலையாளிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மயில்சாமி ஏற்கனவே இதய நோயால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் அவரை கொலை செய்து விட்டார்களே? என உறவினர்கள் கதறி அழுதனர். மயில்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டுள்ளனர்.
    ×