search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem market"

    • கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்தது.

    மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ இன்று 800 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஜாதி மல்லி 360 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற காக்கட்டான் 500 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் இன்று 500 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 140 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    சேலம் மார்க்கெட்களில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த தக்காளி சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையை கேட்டு அதிர்ச்சி அடையும் பொது மக்கள் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக வாய்ப்புள்ளது என்றார்.
    சேலம் மாவட்டத்தில் பெய் மழையால் பூக்கள் வரத்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. பூக்களின் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் முதல் அக்ரஹாரத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டன. குறிப்பாக ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இந்த பகுதிகளில் விவசாயம் அதிக அளவில் பாதித்துள்ளது.

    நடப்பாண்டில் இந்த பகுதிகளில் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாததால் பூச்செடிகள் கருகியது. இதனால் பூக்கள் உற்பத்தி குறைந்ததால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரமாக பூக்கள் வரத்து குறைவாக இருந்தது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் நீரின்றி கருகிய பூச்செடிகள் துளிர் விட்டுள்ளது. மழையை தொடர்ந்து பூச்செடிகளில் அதிக அளவில் பூக்க தொடங்கி உள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு பூக்கள் வரத்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

    கடந்த வாரம் சேலம் மார்க்கெட்டுக்கு 2 டன் முதல் 3 டன் வரை வந்த சம்பங்கி பூக்கள் தற்போது 8 டன் வரை விற்பனைக்கு வருகிறது. இதே போல குண்டு மல்லி பூக்களின் வரத்தும் 10 டன் வரை அதிகரித்துள்ளது. மேலும் சித்திரை மாதம் முடிந்ததால் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூர்த்தமும் குறைந்துள்ளது. இதனால் பூக்களின் தேவை குறைந்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ விலை கடுமையாக குறைந்து இன்று 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 200 ரூபாய்க்கு விற்ற அரளி ஒரு கிலோ 110-க்கும், 150 ரூபாய்க்கு விற்ற ரோஸ் 80 ரூபாய்க்கும், 600-க்கு விற்ற கனகாம்பரம் 250-க்கும் விற்பனையாகிறது.

    இதே போல 300 ரூபாய்க்கு விற்பனையான குண்டு மல்லி 140-க்கும், சன்னமல்லி 160-க்கும், 150-க்கு விற்ற சாமந்தி 80 க்கும், 300-க்கு விற்பனையான பெங்களூரு ரோஸ் 140-க்கும் விற்பனையாகிறது. பூக்களின் இந்த விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
    சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ அதிகபட்சமாக முதல் தரம் 55 ரூபாய்க்கும், 2-ம் தரம் 50 ரூபாய்க்கும் விற்பனையானது.
    சேலம்:

    சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், மேச்சேரி, வீரபாண்டி, எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த வெங்காயத்தை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கி செல்வார்கள். கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் 26 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    இந்தநிலையில் சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்தது. இன்று சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ அதிகபட்சமாக முதல் தரம் 55 ரூபாய்க்கும், 2-ம் தரம் 50 ரூபாய்க்கும் விற்பனையானது.

    உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் முதல் தரம் 48 ரூபாய்க்கும், 2-ம் தரம் 45 ரூபாய்க்கும விற்பனையானது. கடந்த வாரம் 18 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயத்தின் விலை இந்த வாரம் 2 ரூபாய் அதிகரித்து 20 ரூபாயாக உயர்ந்தது. இந்த திடீர் விலை உயர்வால் வெங்காயம் வாங்க சென்ற மார்க்கெட்டுக்கு சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதிக அளவில் வாங்க நினைத்தவர்கள் குறைந்த அளவிலே வாங்கி சென்றனர்.

    இதே போல சேலம் மார்க்கெட்களில் தக்காளி பழத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 16 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி பழம் ஒரு கிலோ இந்த வாரம் மேலும் உயர்ந்து 20 ரூபாய்க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதே போல கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அதிக அளவில் மழை பெய்தது.

    இந்த மழையால் சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் மற்றும் தக்காளி செடிகள் அழுகி சேதம் அடைந்தது. மேலும் தொடர் மழையால் வெங்காய அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய வரத்து மார்க்கெட்களுக்கு குறைந்ததால் அதன் விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களிலும் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

    கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் விலை இதே நாட்களில் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையானது. இந்தாண்டும் தற்போது நாள் ஒன்றுக்கு 5 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து வருவதால் கடந்த ஆண்டை போல வெங்காயம் விலை உயர்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வியாபாரிகள் மற்றம் பொதுமக்கள் உள்ளனர்.

    ×