search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மார்க்கெட்"

    • கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்தது.

    மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ இன்று 800 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஜாதி மல்லி 360 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற காக்கட்டான் 500 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் இன்று 500 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 140 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    • சேலம் மார்க்கெட்டுகளுக்கு எழுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனால் எலுமிச்சை விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை மரங்கள் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் எலுமிச்சை பயிர் செய்யப்பட்ட இடங்களில் அதன் விளைச்சல் அதிக–ரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து மாவட்–டத்தில் உள்ள பல்வேறு பகுதி களில் இருந்து சில்லறை வியா பாரிகள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மார்கழி மாத குளிரை தொடர்ந்து தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்த காரணத்தால், அவற்றின் விலை சரிந்துள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.6-க்கு விற்ற பழம் தற்போது ரூ.3-க்கு விற்கப்–படுகிறது. ரூ.4-க்கு விற்ற பழம் ரூ.2-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மாசி மாதம் தொடங்கவுள்ளது. அப்போது கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால சீசன் ஆரம்பிக்கும் போது தேவை அதிகரித்து, அதன் காரணமாக எலுமிச்சை பழங்கள் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×