search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "revenue loss"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022 அக்டோபர் மாதம், எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
    • யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆமோதித்து மஸ்க் பதிவிட்டார்

    கருத்து பரிமாற்றங்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்த டுவிட்டரை, அமெரிக்காவின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவன பெயரை எக்ஸ் என மாற்றினார். தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். பல பொறுப்புகளில் புதிய பணியாளர்களை நியமித்தார்.

    ஆனால், மஸ்கின் மாற்றங்களால் நிறுவனத்தின் வருமானம் அவர் எதிர்பார்த்ததை போல் அதிகரிப்பதற்கு பதிலாக குறைய தொடங்கியது. எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் முக்கிய வருமானமான விளம்பர வருவாய் குறைந்து வந்தது.

    அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய எக்ஸ் பதிவு ஒன்றில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் ஒரு கருத்தை பதிவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஊடக விவகாரங்களை கவனித்து செய்தி வெளியிடும் மீடியா மேட்டர்ஸ் எனும் நிறுவனம், எக்ஸ் தளத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியினரை பெருமைப்படுத்தும் எக்ஸ் பதிவுகளுக்கு அருகில் ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளிவருவதை சுட்டி காட்டியிருந்தது.

    இதையடுத்து எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன.

    இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #dinakaran #gst

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்லதிருமண விழா நடைபெற்றது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

    அம்மாவின் இணைபிரியாத தோழி சின்னம்மா. அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவர் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா இருந்தாலும் நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா கலந்து கொள்ள முடியாத நிலையில் நான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளேன் என்று கூறினார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டார்.

    பின்னர் தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அபகரித்து கொண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உல்லாசமாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளாரே. உங்கள் கருத்து? 


    பதில்:- திண்டுக்கல் சீனிவாசனை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சட்டமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது இந்த ஆட்சி கலைந்து விடும்.

    நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அப்போது அம்மா வழியில் ஆட்சி நடைபெறும். சேலம்- சென்னை 8 வழிச்சாலையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். #dinakaran #gst

    ×