search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Principal Education Officer"

    • அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதை தொடர்ந்து பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு பாடங்களை கொண்ட 3-வது குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவக்கூடும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

    • விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழுப்புரம் காம ராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் ஒன் மாணவ மாணவிகளுக்கு 1894 பேருக்கு ஒரு கோடி மதிப்பிலான சைக்கிள் வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கல்வி மாவட்டத்தின் சார்பில் இன்று விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தலைமை தாங்கினார். விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி சக்கரை வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக அனைவரையும் விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் வரவேற்றார். 

    விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு விழாவில் பேரூரையாற்றி விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி , விழுப்புரம் நகராட்சி பீமநாயக்கன் ,மேல்நிலைப் பள்ளி கீழ்பெரும்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் காம ராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் ஒன் மாணவ மாணவிகளுக்கு 1894 பேருக்கு ஒரு கோடி மதிப்பி லான சைக்கிள் வழங்கினார். முடிவில்விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.

    ×