search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plant Trees"

    • பனை, ஆலமரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டுகோள்
    • பசுமைக் குழு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் காரணமாக அகற்றப்பட வேண்டிய மரங்கள் குறித்த விவரம் பசுமை குழு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பனைமரம் மற்றும் ஆலமரம் போன்ற பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய மர வகைகளை அகற்றுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறை களின்படி ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு ஈடாக 10 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்கின்ற நிலையை பின்பற்றும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் அந்த மண்வளத்திற்கு ஏற்ற நம்முடைய பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

    புதிய மரங்களை நடவு செய்த பின்னர் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மரங்களை நடவு செய்யும் பொழுது உயரம் குறைவாக உள்ள மரக்கன்றுகளை தவிர்த்து குறைந்தது 6 அடி முதல் 8 அடி வரை உள்ள மர வகைகளை நடவு செய்ய வேண்டும்.

    ஆலமரம் மற்றும் அரச மரங்களின் கிளைகளை வெட்டி நடவு செய்தாலே நல்ல நிலையில் வளர்ந்து வரும். நம்முடைய மண்வளத்திற்கு ஏற்ற மரவகையில் குறித்த ஆலோசனைகளை மாவட்ட வனத்துறை யிடமிருந்து பெற்று நடவு செய்யலாம்.

    பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் நம்முடைய வேலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 18 லட்சம் மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட வனத்துறையில் 10 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை வருகின்ற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் அதாவது பருவமழை தொடங்கு வதற்குள் நடவு செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கொடைக்கானலில் விவேக் கூறினார்.
    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1978-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் கலந்து கொண்டார். பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டதுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும். பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும்.



    தற்போது மரக்கன்றுகள் நடவு செய்தால் மட்டும் தான் 10 ஆண்டுகளில் மழை பொழிவை பெற முடியும். ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினர். 

    இதையடுத்து அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நல்ல கருத்துகளை சினிமா மூலம் எடுத்துச் சொல்வதாகவும், வாய்ப்பு இருந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

    2 ‘ஜி’ வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கேட்டவர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. #2GCase #DelhiHighCourt #TreePlant
    புதுடெல்லி:

    மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, 2 ‘ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு.

    இதில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்தன.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்த சட்ட விரோத பணபரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து டெல்லி தனிக்கோர்ட்டு 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

    இதே போன்று சி.பி.ஐ. தொடுத்த ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை அதே நாளில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை செய்தது.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மேல்முறையீடு செய்தது.

    அதைத் தொடர்ந்து மறுநாளில், ஊழல் வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்து வருகிறார்.

    இதில் சுவான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் சாகித் பல்வா, குசேகான் பழம், காய்கறி நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால் மற்றும் டைனமிக் ரியால்டி நிறுவனம், டி.பி. ரியால்டி நிறுவனம், நிகார் கட்டுமான நிறுவனம் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்கிய நீதிபதி நஜ்மி வாஜிரி, அவர்கள் ஒவ்வொருவரும் தெற்கு டெல்லி பகுதியில் தலா 3 ஆயிரம் மரம் நடுமாறு உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக சாகித் பல்வாவும், ராஜீவ் அகர்வாலும் நேரிலும், பிற 3 நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளும் சம்மந்தப்பட்ட வன அதிகாரி முன் வரும் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

    வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #2GCase #DelhiHighCourt #TreePlant 
    ×