search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "physical health"

    • பனங்கிழங்கு பொடி, கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் என பல பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் - கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கதர் கிராம பொருட்கள் மற்றும் பனைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், மக்களிடையே பனைப் பொருட்களைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், இராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பனைப் பொருட்கள் மற்றும் காதி கிராப்ட் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழச்சாறு, சுக்குகாபி, பனை ஓலைப் பொருட்கள், சுக்கு காபித் தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட வைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களைக் கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக இவ்வங்காடி விற்பனைக்காக தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், தஞ்சாவூர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ப்ரான்ஸீஸ் தெரஸா மேரி, மேலாளர் சாவித்திரி, பனைப்பொருள் பெருவளத்திட்டம் திட்ட அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சைக்கிள் பயணத்தால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடந்தது. திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தில் இருந்து கண்டு குளம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளும், மற்ற பள்ளி மாணவர்கள், பெற்றோர்களும் பங்கேற்றனர். தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தாளாளர் மதிவாணன், ஷாலினி முன்னிலை வகித்தனர். முதல்வர் கீதா ராணி, அகாடமி இயக்குனர் சத்யா, உடற் கல்வி ஆசிரியர் முத்தையா ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கண்டு குளத்தில் உள்ள பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
    ஆஸ்துமா ஒரு வகையான ஒவ்வாமை மற்றும் அழற்சி நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூண்டும் பொருட்களால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுததி தடித்தும் விடுகிறது. இதன் விளைவாக மூச்சு குழாய் வழியாக காற்று உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாகிறது. இதனால் மூச்சிரைப்பு, இருமல் ஏற்படுகிறது.

    ஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளது. குறைந்த அளவு, அதிகளவு, மிக அதிகளவு ஆஸ்துமா என மூன்று நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பதால் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மருந்தின் அளவு குறைக்கப்படும். மிக அரிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே உபயோகப்படுத்தப்படும்.

    இந்த நிலையில் ஸ்டீராய்டின் பாதிப்பு இருக்காது. அதிகம் மற்றும் மிக அதிகம் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகளவு ஸ்டீராய்டுகள் உடலுக்கு மிகக் கெடுதி என்பதால் தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு மிக அதிக அளவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.

    ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முக்கியமாக அவர்களுக்கு ஒப்புக் கொள்ளாத உணவு, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியானவற்றை உண்ணாமல் தவிர்ப்பது, முறையான டயட், வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்வது, வெளியே செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வது போன்றவற்றால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது.

    ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், மிக அதிகளவு கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு மருந்தில் அதிகளவு ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், ஆஸ்துமாவின் தீவிரத்தின் காரணமாக இவற்றின் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ஸ்டீராய்டின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.
    பாஸ்தாவை சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.
    'பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.

    பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மைகொண்டது. இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.



    நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்த்து, கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி போன்ற முழுதானிய மாவில் இருந்தும் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும். முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால், அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.

    கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. இதைச் சாப்பிடும்போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.



    இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும்போது, அதன் பலன்களும் கூடும். எனவே, கடைசியில் பாஸ்தா வாங்கும்போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.

    * இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

    * செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

    * சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்த்து, பாஸ்தாவுக்குப் பதில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது'

    'நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வதுபோன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம். சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.'
    ×