search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nithyananda ashram"

    • பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது
    • தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்து வரப்பட்டதாக தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன.

    கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு வருவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நித்யானந்தாவின் 46-வது அவதார தின தொடர் கொண்டாட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நடைபெற்று வருகின்றது.

    இதையொட்டி கடந்த 6-ந்தேதி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா நாளை வரை கொண்டாப்பட உள்ளது.

    இந்த நிலையில் நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு லாரியில் தேர் பீடம் கொண்டு வரப்பட்டது. அதனை கிரேன் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கி ஆசிரமத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

    இந்த தேர் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும், அவதார தின விழா நிறைவின் போது கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசிரமத்தின் அருகில் இருந்த சிடர்களிடம் கேட்ட போது, பல்வேறு கோவில்களில் தேரோட்டடம் நடத்தப்படாமல் உள்ளதால் தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தேர் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    திடீரென நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு தேர் கொண்டு வரப்பட்ட தகவல் கிரிவலப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெங்களூரு நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் விவசாயி ஒருவர் மனு கொடுத்தார்.
    நாமக்கல்:

    ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தங்களிடம் எனது மனைவி அத்தாயி மற்றும் மகன் பழனிசாமி ஆகியோர் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்று விட்டு, வீடு திரும்பவில்லை என தெரிவித்து இருந்தேன். இதையடுத்து காவல் துறையினர் எனது மகனை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்.

    ஆனால் என் மனைவி அத்தாயி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ.5 லட்சமும், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும், நகை அடமான கடனாக ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளிநபர் கடனும் உள்ளது.

    வங்கி அதிகாரிகள் என்னை நேரில் அழைத்து ஒப்பந்தம் போடவும், பணத்தை திருப்பி செலுத்துமாறும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்த பணம் முழுவதையும் தியான வகுப்புக்கு சென்ற எனது மனைவி எடுத்துக்கொண்டு செலவு செய்துவிட்டார். இதனால் கடந்த 8 மாத காலமாக நான் கடன் தொல்லையாலும், உணவு இன்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே எனது மனைவியை மீட்டு, நேரில் வரவழைத்து கடனை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×