என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "marraige"
- இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
- இளம்பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.
கோவை
கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 26). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார். அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும், அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று அஜித்குமார் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.
அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்தும், அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கூடலுர் கவுண்டம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சங்கர் (31). டிரைவர். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எந்திரிக்கவில்லை. அவரது வீட்டுக்கு சென்ற அவரது நண்பர் அதனை பார்த்து சங்கர் எழுப்பி விட்டார்.
அப்போது அவர் இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மீனாட்சி-சுந்தரேசுவரர், முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.
* முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, அய்யப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திரத்தன்று பிறந்தனர்.
* சிவபெருமான், தனது நெற்றிக்கண் கொண்ட நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.
* இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட தேவலோக அதிபதி இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.
* மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து தான் மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.
* 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டதும் பங்குனி உத்திர தினத்தில் தான்.
* காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்