search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India England Series"

    • கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன்.
    • எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக கடந்த நவம்பர் 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகமது ஷமி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இருந்து விலகினார்.

    இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் முகமது ஷமி உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இது குறித்து முகமது ஷமி கூறுகையில், 'கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன். எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணுக்காலில் லேசான விறைப்பு இருக்கிறது. ஆனாலும் நன்றாகவே உள்ளேன். பயிற்சியையும் தொடங்கி விட்டேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். சவாலான போட்டிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரின்போது வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி. #ENGvIND #Ganguly
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டரை மாதங்களாக நடக்க இருக்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இந்த தொடரை இந்தியாவில் ஒளிப்பரப்பு உரிமை பெற்றுள்ள டிவி கங்குலியை நியமித்துள்ளது.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘கடந்த காலங்களில் இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலான இந்திய அணிக்கு சவாலாக இருந்துள்ளது. எனினும், தற்போதுள்ள மிகச்சிறந்த அணியால் தொடரில் மிகவும் நெருக்கமான போட்டியை வெளிப்படுத்துவோம் என்று நினைக்கிறேன்.



    இங்கிலாந்தில் நான் விளையாடிய குறித்து ஏராளமான நினைவுகள் உள்ளன. இந்த தொடரின்போது என்னுடைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார்.

    கங்குலி உடன் சுனில் கவாஸ்கர், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஸ்வான் ஆகியோரும் வர்ணனையாளராக செயல்பட இருக்கின்றனர்.
    ×