search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inaugurates"

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami #Farmers
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. 

    இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் பயனடையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலைவாணர் அரங்கத்தில் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.2000-க்கான உதவித்தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்றார். #EdappadiPalaniswami #Farmers
    சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார். #NirmalSitharaman #TamilnaduDefenceIndustrial
    திருச்சி:

    இந்தியாவில் தொழில் துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநிலம் அலிகாரிலும், தமிழகத்திலும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (‘காரிடார்’) அமைக்கப்படும் என்று அறிவித்தார். தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இந்த நகரங்களையொட்டி நெடுஞ்சாலைகளில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தனியார் துறையினரும் பங்கு கொள்ள மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது.

    அலிகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழித்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.

    தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தின் தொடக்க விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராணுவ அமைச்சக அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

    நேற்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ரூ.3,038 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

    இதில் பொதுத்துறை நிறுவனமான ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் ரூ.2,305 கோடியும், பாரத் மின்னணு நிறுவனம் ரூ.140 கோடியே 50 லட்சமும், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.150 கோடியும் முதலீடு செய்கின்றன.

    தனியார் நிறுவனங்களான டி.வி.எஸ் ரூ.50 கோடியும், டேட்டா பேட்டன்ஸ் ரூ.75 கோடியும், ஆல்பா டிசைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடியும் முதலீடு செய்கின்றன. சர்வதேச அளவில் ராணுவ தளவாட உற்பத்தியில் சிறந்து விளங்கும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் இந்த வழித்தடத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளது.

    விழாவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் மத்திய அரசிடம் கேட்ட திட்டங்களை பிரதமர் மோடி இப்போது நிறைவேற்றி வருகிறார். ஒவ்வொரு திட்டத்தையும் மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நாங்கள் (பா.ஜ.க.) செயல்படுத்துகிறோம்.

    இந்த ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தை கேரள மாநிலம் பாலக்காடு வரை நீடிக்க வேண்டும் என்று உள்ளூர் தொழில்துறையினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இந்த வழித்தடம் தற்போதைக்கு சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை ஆகிய 5 நகரங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.

    இந்த வழித்தடம் இந்த பகுதியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதோடு, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

    திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையை மூடிவிடப்போவதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். திருச்சி, ஆவடி யில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை. இதேபோல் ஊழியர்களை வேலைநீக்கம் செய்யப்போவதாக பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிலும் உண்மை இல்லை.

    பாதுகாப்பு துறையில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களை தமிழக அரசு முறையாக அணுகி ஒரு குழு அமைத்து அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

    இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தேவை இல்லை. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். எந்தவொரு பொதுநல திட்டத்துக்கும் மத்திய அரசு இடையூறாக இருக்காது.

    இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார்.

    விழாவில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரான நவீன ரக துப்பாக்கி மற்றும் உபகரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதேபோல் புதிதாக தயாராக உள்ள ராணுவ தளவாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ராணுவ துப்பாக்கிகள், மாதிரி பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன.

    விழாவில், கோவையில் உள்ள கொடிசியாவில் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு துறைக்கான புதிய கண்டு பிடிப்பு மற்றும் வளர்ச்சி மைய திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். #NirmalSitharaman #TamilnaduDefenceIndustrial
    குஜராத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். #PMModi #GunMakingUnit #PrivateSectorHowitzer
    ஹஜிரா:

    மத்திய அரசு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கிவருகிறது. இதன் அடிப்படையில் லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனம் 2017-ம் ஆண்டு ராணுவ அமைச்சகத்திடம் ‘கே9 வஜ்ரா’ என்ற ராணுவ பீரங்கிகள் தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி ரூ.4,500 கோடியில் 100 பீரங்கிகள் வழங்க வேண்டும்.

    இதற்காக குஜராத் மாநிலத்தில் சூரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹஜிரா என்ற இடத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவன உற்பத்தி வளாகத்தில் 40 ஏக்கரில் பீரங்கி உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் தொழிற்சாலை வளாகத்தையும், தயாராகிவரும் பீரங்கிகளையும் அவர் பார்வையிட்டார்.



    கே9 வஜ்ரா ராணுவ பீரங்கியின் தொழில்நுட்பம் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தமும் இந்த விழாவில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், கொரிய மந்திரி வாங்க் ஜங் ஹாங், எல் அண்டு டி குழும தலைவர் ஏ.எம்.நாயக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டர் வலைத்தளத்தில், “இந்த நிறுவனத்தின் முழு அணியினரையும் இதற்காக நான் பாராட்டுகிறேன். இங்கு கே9 வஜ்ரா பீரங்கி உற்பத்தி செய்யப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கும், இந்திய ராணுவத்துக்கும் முக்கிய பங்காற்றுவதாகும். பாதுகாப்பு துறையிலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதே நமது முயற்சி. தனியார் நிறுவனங்களும் இதனை ஆதரிக்கும் நோக்கத்தில் தனது பங்களிப்பை வழங்குவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு, ஒரு பீரங்கியில் ஏறி நின்று அதனை தானே படம்பிடித்த வீடியோவையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதில், ‘எல் அண்டு டி நிறுவனத்தில் பீரங்கியை சோதனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் கே9 வஜ்ரா பீரங்கிக்காக 400 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சுமார் 13 ஆயிரம் உதிரிபாகங்களை தயாரிக்கின்றன. இதில் வெளிநாட்டு உதவியின்றி அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிறது.

    கே9 வஜ்ரா பீரங்கி 50 டன் எடையும், 47 கிலோ குண்டுகளை 43 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறனும் கொண்டது என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #GunMakingUnit #PrivateSectorHowitzer
    பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். #NirmalaSitharaman #Hussainiwala
    பெரோஸ்பூர்:

    பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உசைனிவாலா கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கு அந்த கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் நதியின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

    கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, எதிரி நாட்டுப்படைகள் முன்னேறாமல் இருப்பதற்காக இந்த பாலம் தகர்க்கப்பட்டது. பின்னர் போர் முடிவடைந்ததும் அங்கு 280 அடி தூரத்துக்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்த தற்காலிக பாலத்தை மாற்றிவிட்டு 82.40 மீட்டர் தொலைவுக்கு நிரந்தர பாலம் அமைக்கும் பணிகளை எல்லையோர சாலை அமைப்பிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த பாலப்பணிகள் தொடங்கி முடிவடைந்தது.

    பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருடன் தொடர்புடைய பூமியாகும், உசைனிவாலா. இந்த புனித பூமியில் பணியாற்றும் அரிய வாய்ப்பு பெற்றிருப்பதை, இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ள ராணுவ வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.  #NirmalaSitharaman #Hussainiwala  #tamilnews 
    ×