search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Committee"

    • அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தலைமைக் கழகத்தில் கூடியது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆன பிறகு நடைபெறும் பொதுக்குழு என்பதால் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தேர்தல் கமிஷனின் சட்டதிட்ட விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தலைமைக் கழகத்தில் கூடியது.

    இதைத் தொடர்ந்து இப்போது அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நாளை காலை 10.35 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த பொதுக்குழு நடைபெறுவதால் ஜெயலலிதா இருந்தபோது என்னென்ன நடைமுறைகளை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணி உள்பட 10 பேர்கள் வரை பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் இறுதியாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாடு பற்றி ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். வர இருக்கும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து

    அ.தி.மு.க. விலகியுள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வியூகம் எவ்வாறு அமையும் என்பதை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்குழுவில் சூசகமாக தெரிவிப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இதில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்பதை பறைசாற்றும் வகையில் தீர்மானம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    முதன் முறையாக பொதுச் செயலாளர் ஆன பிறகு இந்த பொதுக்குழு நடைபெறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு - செயற்குழு வாழ்த்து தெரிவித்து முதல் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளனர்.

    மிச்சாங் புயல் மழை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வருவதுடன் தி.மு.க. அரசு மேற் கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் ஒரு தீர்மானம் கொண்டுவர உள்ளனர்.

    இவை உள்பட 17-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டு வரப்படும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.


    கடந்த வருடம் ஜூன் 22-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வானகரத்தில் கூடிய போது அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைகள் இருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமைகளாக இருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற அந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கோர்ட்டு கூறி உள்ள நிலையில் தேர்தல் கமிஷனும் அப்போது நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டது.

    இந்த சூழலில் இப்போது அ.தி.மு.க.வின் செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வெகு விமரிசையாக வானகரத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்க 2,800 பேர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பகுதி கழக, பேரூர் கழக நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். இது தவிர முக்கிய விருந்தினர்களுக்கும் சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகி முதன் முறையாக பொதுக் குழுவில் கம்பீரமாக பங்கேற்க உள்ளதால் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேளதாளம் முழங்க தொண்டர்கள் வழி நெடுக நின்று அவருக்கு வர வேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.

    மேலூர்

    அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேலூர் கோட்டை கிணறு தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மதுரை 6-ம் பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சபரிமலை சேவைகள், சங்க வளர்ச்சி குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், 7-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலூர் துணைச் செயலாளர் அழகுராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
    • கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கடந்த 23-ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதற்கு மத்தியில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

    இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் நடத்தவுள்ளதாக சற்று நேரம் முன்பு தகவல் வெளியானது. இதற்காக, அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், ஈசிஆர் விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் கூடுகிறது. #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் பக்கம் சென்ற நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணிசமாக உள்ளனர். இவர்களுக்கு பதில் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை இன்னும் முழுமையாக நிரப்பாமல் உள்ளது.இதில் பொதுக்குழு உறுப்பினர்களும் அடங்கும்.

    இதனால் வருடத்துக்கு ஒரு முறை கூட்டப்பட வேண் டிய அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் கடந்த ஆண்டு கூட்டப்படவில்லை.

    தற்போது ஒவ்வொரு மாவட்டச்  செயலாளர்களிடமும் தினகரன் பக்கம் சென்ற பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அ.தி.மு.க. தலைமை கேட்டு வாங்கி அந்த இடத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறது.

    இதை நிறைவு செய்தால் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் தேர்தல் கமி‌ஷனில் 2 மாதம் கால அவகாசம் கேட்டிருந்தனர்.

    தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் அ.தி.மு.க.வில் புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்துள்ளனர்.

    இதில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் 3 மாதத்தில் வர உள்ளதால் ஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமா? என்பதை பொதுக்குழுவில் கலந்து பேச உள்ளனர்.

    இதன் பிறகு கூட்டணி முடிவை அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பொதுக்குழு கூடும் அன்றைய தினமே செயற் குழு கூட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த கூட்டத்தில் முடிவு செய்து விடுவார்கள் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×