search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fertilizer sale"

    • குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் விவேகானந்தா கல்லூரியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விலங்கியல் துறை மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    இதன் மூலம் மக்கும் கழிவுகளை நன்கு மக்க வைத்து அதனுடன் தினசரி கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கிய டீ தூள், காய்ந்த சாணம் ஆகியவற்றை அடுக்கடுக்காக கலந்து தொட்டிகளில் நிரப்பி வெல்லம் கரைசல் தெளித்து மண்புழுக்களை வளர்ப்பதற்கான மண்புழு உரத் தொட்டியில் நன்கு ஈரப்பதம் ஏற்படுத்தி தற்போது உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு தயாரிக்கப் படும் உரத்திற்கு செழிப்பு என அரசால் பெயரிடப்பட்டு மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக செழிப்பு உரம் விற்பனை செய்வதற்கான வேளாண்மை துறை உரிமம் சோழவந்தான் பேரூராட்சி பெற்றுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் மண்புழு உரம் கிலோ ரூ.5-க்கு மிக குறைந்த விலையில் பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த உரத்தின் தரம் குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பகுப்பாய்வு செய்து மிகச்சிறந்த உரம் என தர சான்றிதழும் பெறப்பட் டுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அரசு தயாரிக்கும் இந்த உரத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தியாகதுருகம் பகுதி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்பட்டனர்.
    • யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பராமரித்து வருகின்றனர். பயிர் செய்துள்ள விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுகின்றனர். இவ்வாறு பயிர் கடன் பெரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்களுக்கு தேவையான அளவு உரம் மற்றும் ரொக்கம் ஆகியவை கடனாக வழங்கப்படுகிறது. 

    அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று உரம் வாங்கும் விவசாயிகளிடம் ஒருசில கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ளஸ் ஆகிய உரங்களை மட்டுமே இருப்பு உள்ளது எனவும், கடந்த ஒருமாத காலமாக யூரியா இருப்பு இல்லை என கூறுகின்றனர். எனவே விவசாயிகள் தனியார் கடைகளில் யூரியா வாங்கும் அவல நிலை உள்ளது. இதனால் தியாகதுருகம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா வாங்க செல்லும்போது வியாபாரிகள் டி.ஏ.பி.,காம்ளஸ் ஆகிய உரங்களை எடுத்தால் மட்டுமே யூரியா மட்டும் வழங்க முடியும் எனவும் கூடுதலாக திரவ யூரியாவும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    மேலும் ரூ. 266 க்கு விற்பனை செய்ய வேண்டிய யூரியா முட்டை ரூ.350 முதல் 400 வரை விற்பனை செய்வதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதேபோல் கடந்த மாதம் யூரியா கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவது குறித்து வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படி தியாகதுருகம் வேளாண்மை அதிகாரிகள் உரக்கடைகள் ஆய்வு செய்தனர்.ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது . எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து யூரியா கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். . மேலும் தியாகதுருகம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ராஜபாளையம்:

    உர வினியோகத்தை முறைப்படுத்தவும், முனைய கருவி மூலம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை சோதனை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும், தரக் கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் 3 முதல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த குழுவினரும் வெவ்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சேத்தூர், தளவாய்புரம், முகவூர், அய்யனாபுரம், சமுசிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 37 இடங்களில் விவசாயத்திற்கு தேவையான உரம் விற்பனை செய்யப்படுகிறது.இதில் 4 மொத்த விற்பனை நிலையங்கள், 12 தொடக் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் அடங்கும்.

    இங்கிருந்து உரம் வாங்கும் விவசாயிகளுக்கு, அரசு அளித்துள்ள விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே ரசீது வழங்க வேண்டும். இந்த முறை சரியாக பின்பற்றப் படுகிறதா? என திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    8 அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ராஜபாளையம், தென்காசி சாலையில் உள்ள உரக் கடைகள் மற்றும் உரம் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த குடோன்களில் ஆய்வு செய்தனர்.

    உரக் கடைகளில் உள்ள விற்பனை உரிமம், விற்பனையில் முனைய கருவி மூலம் ரசீது வழங்கப்படுகிறதா? அரசு நிர்ணயித்த விலையில் உரம் விற்பனை செய்யப்படுகிறதா? தராசு முத்திரையிடப்பட்டுள்ளதா? உரங்கள் சரியான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? இருப்பு பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

    ×