search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake note"

    • நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது40). இவரிடம் ஒரு பெண் பழம் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு போல் இருந்துள்ளது. இதனால் வேறு ரூபாய் நோட்டை தருமாறு பஞ்சவர்ணம் கூறியுள்ளார்.

    உடனே அந்த பெண் முதலில் கொடுத்த 500 ரூபாயாயை வாங்கி கொண்டு வேறு ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை இரண்டும் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பழம் வாங்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (56) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள துரைச்செல்வி என்பவரின் மகள் பெற்ற தொகையிலிருந்து இந்த நோட்டை எடுத்து வந்து பழம் வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வேண்டுராயபுரத்தில் உள்ள துரைசெல்வியின் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக சுப்புதாயை போலீசார் கைது செய்தனர். துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துரைசெல்வி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சில நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

    கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் 14 வைர கற்களும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 501 ம் இருந்தன. அவர்களிடம் கேட்டபோது வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

    இதில் மேலும் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததால் அவர்களை விஜயநகரம் நிடமனூர், நாரயணனபுரம் காலணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 8 பேர் கொண்ட கும்பல் ஸ்கேனரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய 2 லேப்டாப், 2 கலர் பிரிண்டர்கள், 1 ஸ்கேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனந்தபூரை சேர்ந்த முகமத் காஜா இம்ரான் (27), முகமத் ஆலி (55), மோகன் (40), சரண்குமார் (23), நவநீத குமார் (27), விஜயவாடா பாலகுமார் (29), பவன்குமார் (23), விசாகப்பட்டினம் மங்குநாயுடு (37), அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரம் மோகன் (40), ஐதராபாத் நிஜாம்பேட்டை வர்மா (50), கிருஷ்ணா மாவட்டம் கனப்பவரம் முரளி கிருஷ்ணாரெட்டி என்பது தெரியவந்தது.

    மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எவ்வளவு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திறமையாக விசாரணை நடத்தி கள்ள நோட்டு கும்பலை பிடித்த போலீசாரை திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், டி.எஸ்.பி. ரவிசங்கர், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

    அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வைர கற்கள் ரூ. 5.30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். #fakecurrency
    கோவை:

    கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் ஒரு கோடியே 18 லட்சம் அளவுக்கு பிடிபட்டுள்ளது, வியாபாரிகள், பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனால் கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பாக காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சில்லரையாக கொடுங்கள் என வியாபாரிகள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பொதுமக்கள் அதை மாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர்.

    பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது பல முறை பார்த்துதான் வாங்குகிறார்கள். இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளநோட்டுகளை ஏஜெண்டுகள் மூலம் புழக்கத்தில் விடுகிறார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கள்ளநோட்டுகளை கண்டறியும் எந்திரங்களை பணம் எண்ணும் இடத்தில் பயன்படுத்துவது தற்போது கோவை நகரில் அதிகரித்துள்ளது. 
    ×