search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diploma"

    • படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.
    • ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு,ஓட்டல் மானேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூ ட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு களில்சேர்ந்து படித்திடவும் , படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். சென்னை தரமணியில் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

    இந்நிறுவனத்தில்12-ம் வகுப்பு முடித்த ஆதிதிரா விடர்மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்ட படிப்புபி.எஸ்.சி. , ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு (டிப்ளமோ புட் புரோடக்க்ஷன் ) 10-ம்வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடு தல்,கைவிைனஞர் உணவு மற்றும் பானசே வையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு,முன் அலுவலக செயல்பாட்டில் பட்டய ப்படிப்பு ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்புஆகிய பட்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள். விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படி ப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2-வில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • தகுதியுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    ஹெச்சிஎல் நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு ஹெச்சிஎல் டெக்னாலஜில் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்தி லுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம்., பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை

    பட்டபடிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்றுதரப்படும்.

    இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 -ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இ எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பி ற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

    இத்திட்டத்தில் வருடாரந்திர ஊதியமாக ரூ.1,70,000- முதல் ரூ.2,20,000- வரை பெறலாம்.

    மேலும் திறமைக்கேற்ற வாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.

    இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம்

    www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவல கத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்க ளுடன் பதிவேற்றம் செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவல கத்தை அணுகவும் தொலை பேசி எண்:04364-211217.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட கேன்சரையும் குணப்படுத்தி, 6 டிப்ளமோ மற்றும் 1 டிகிரி படித்து முடித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, முதற்கட்டமாக சுமார் 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரின் தன்னம்பிகை ஊட்டும் சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    1989-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி சந்திரசேகரன். இவருக்கு சில ஆண்டுகள் முன்பு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. இந்த புற்றுநோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடியுள்ளார் சந்திரசேகரன்.

    சிறைத்துறை அதிகாரிகளின் உதவியுடனும் மருத்துவர்களின் உதவியுடனும், மன உறுதியுடனும் தனக்கு வந்த உயிர்க்கொல்லி நோயை கடந்து புதுவாழ்வு பெற்றார். அதன்பின்னர் சிறையில் இருந்தபடியே, கல்வியின் மீது தனது கவனத்தை செலுத்தினார்.

    சிறையில் காலத்தை வீணாக்காமல், 50 வயதை கடந்த சந்திரசேகரன், 6 டிப்ளமோ படிப்புகளையும், ஒரு டிகிரியையும் படித்து முடித்து பட்டதாரியாக சுதந்திரம் பெற்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் கூறும்போது, ‘சிறையில் எனது காலத்தை இனிமையானதாகவும், என்னை சுற்றி இருந்த பகுதிகளை சுவர்க்கம் போலவும் மாற்றிக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.



    தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சந்திரசேகரனை பரிந்துரை செய்துள்ளனர். அவரது நன்னடத்தை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு அளிக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகரன் மட்டுமன்றி, சிறையில் இருந்த பலரும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பல வருடங்களாக சிறை தண்டனை பெற்ற கைதிகள் தற்போது மனம் திருந்தி, குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

    சிறையிலும் கல்வி கற்கும் இவர்கள், உலகின் பலதரப்பினருக்கும் உதாரணமாக திகழ்வர் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் சிறைவாசிகள் என்பதனால் மட்டுமே இவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் சில நிறுவனங்களும் தங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×