search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டயப்படிப்பு"

    • படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.
    • ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு,ஓட்டல் மானேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூ ட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு களில்சேர்ந்து படித்திடவும் , படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். சென்னை தரமணியில் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

    இந்நிறுவனத்தில்12-ம் வகுப்பு முடித்த ஆதிதிரா விடர்மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்ட படிப்புபி.எஸ்.சி. , ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு (டிப்ளமோ புட் புரோடக்க்ஷன் ) 10-ம்வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடு தல்,கைவிைனஞர் உணவு மற்றும் பானசே வையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு,முன் அலுவலக செயல்பாட்டில் பட்டய ப்படிப்பு ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்புஆகிய பட்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள். விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படி ப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.
    • 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர், ஜூலை.3-

    கோவை வேளாண் பல்கலைகழகத்தில் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இப்பல்கலையின் கீழ் வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.விண்ணப்பம் வழங்க தற்போது 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    www.tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422-6611346, 9488635077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×