search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிப்ளமோ"

    • கல்லூரி விதிகளை முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிப்ளமோ முதலாம் ஆண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் டிப்ளமோ முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ், துணை முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.பேராசிரியர் ரெஜினா வரவேற்றார்.

    வெற்றிக்கான வழி, மனிதனுடைய மதிப்புகள், பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட கல்வி அறிவு, யோகா பற்றிய செயல்முறை பயிற்சி, ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள பிரச்சினைகள், பிளம்பிங் மற்றும் தளவமைப்பு திட்டமிடுதல், செயற்கை நுண்ணறிவு, வாகனங்களின் பாகங்கள் பற்றிய விளக்கங்கள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு பேராசிரியர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது.

    பேராசிரியர் மீனாட்சியம்மாள் கல்லூரி விதிகளை முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பேராசிரியர் வெராசலின் பேபி நன்றி கூறினார். மாணவி ரெசிபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிப்ளமோ முதலாம் ஆண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×