search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counterfeit money"

    • கள்ளநோட்டுகள், ஸ்கேன் எந்திரம், கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார்.

    ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.
    • 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின.

    புதுடெல்லி :

    கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், அதன் பிறகும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூ.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

    அதிகபட்சமாக, 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின. 2017-ம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ம் ஆண்டு ரூ.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016-ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதுபோல், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கைப்படி, 2021-2022 நிதிஆண்டில், வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

    2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 604 ஆகும். இது, முந்தைய நிதிஆண்டை விட 54 சதவீதம் அதிகம். அனைத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதிஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது.

    2019-2020 நிதிஆண்டில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ள நோட்டுகள் பிடிபட்டன.

    ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.

    ஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் மூலம் ரூ.2000 கள்ள நோட்டு அச்சடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    மராட்டிய மாநிலம் புனே நகர போலீசார் ரூ. 2 ஆயிரம், ரூ. 500 கள்ள நோட்டுகளை அச்சடித்த 4 பேரை புனேயில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக தெரிவித்தனர்.

    அதன் பேரில் வெங்கடேசனை பிடிக்க புனே மாநகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பொன்னேரி வந்தனர்.

    ஆனால் கள்ள நோட்டு கும்பல் தெரிவித்த முகவரியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் புனேயில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த ஒருவனின் செல்போன் சிம்கார்டு மூலம் வெங்கடேசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    அவர் போனை எடுக்க வில்லை. போன் டவரின் சிக்னல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி ஜடியல் சிட்டி பகுதியை காட்டியது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் வெங்கடேசன் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருவதாக தகவல் கிடைத்தது.

    நேற்று அதிகாலையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். கதவை திறந்து வெளியே வந்த வெங்கடேசன் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்த கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் புனேயில் பணிபுரிந்த போது அங்கேயே தங்கி விட்டார். இதனால் அவரின் குடும்பம் புனேக்கு குடிபெயர்ந்தது. 24 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் அங்குள்ள திருட்டு கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.

    20 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் வேலையில் இறங்கினார். அங்குள்ள ஒரு நபர் போலீசிடம் ரகசிய தகவல் கொடுத்ததையடுத்து வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் வெங்கடேசன் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார் என்று புனே நகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தெரிவித்தார். போலீசார் வெங்கடேசனை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புனேவுக்கு அழைத்து சென்றனர்.

    ×