search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collegium"

    வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை நீதிபதியாக்கும் விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. #CollegiumJudges #SupremeCourt
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை அந்த கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் புகார்கள் இருப்பதாக கூறி அந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே திருப்பி அனுப்பியது.

    எனினும் அந்த புகார்கள் அனைத்தும் அற்பமானவையே எனக்கூறி மீண்டும் அவர்களது பெயரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை 2½ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, தற்போது மீண்டும் நிராகரித்து உள்ளது. இதுதொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

    கொலிஜியத்தில் உறுப்பினராக இருந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த வாரம் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினரை நியமித்த பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

    இதற்கிடையே காஷ்மீர் ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கக்கோரி அனுப்பி வைக்கப்பட்ட வக்கீல் நஜிர் அகமது பெய்க்கின் பெயரையும் திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
    உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. #KMJoseph #Collegium
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் கடந்த 2-ம் தேதி கூடியது. கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், கே.எம் ஜோசப் பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.



    கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த நீதிபதி ஏற்கனவே இருப்பதால், ஜோசப் பெயர் ஏற்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. #KMJoseph
    ×