search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bobby Simha"

    • நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டுவது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ஜமீர் தரப்பினருக்கும் பாபி சிம்ஹா தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
    • பொய்யான தகவல்களை கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என புகார் அளித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறையில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டுவது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ஜமீர் தரப்பினருக்கும் பாபி சிம்ஹா தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து விசாரணை நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் பாபி சிம்ஹா தரப்பு விளக்கத்தைக் கேட்டு கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இருந்து ஜமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பாபி சிம்ஹா தரப்பு வக்கீல்கள் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இது பற்றி பாபி சிம்ஹா தரப்பு வக்கீல் பாலு கூறியதாவது, போலீஸ் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    பாபி சிம்ஹா இங்கு இல்லாததால் நாங்கள் இதன் அடிப்படையில் எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளோம். அவர்கள் எங்கள் மீது பொய் புகார் அளித்து உள்ளனர் என்று விளக்கம் அளித்து உள்ளோம். இந்த விஷயம் சம்பந்தமாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜமீர் தரப்பில் உள்ள உசைன் தொடர்ந்து பொது வெளியில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார். மீண்டும் அவர் இதுபோன்று பொய்யான தகவல்களை கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார்.
    • பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.

    ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர். கட்டுமான பணிகள் செய்வதற்காக பாபிசிம்ஹாவிடம் ஜமீர் ரூ.1. கோடியே 70 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

    பணிகள் பாதியில் நிற்கவே இதுகுறித்து ஜமீரிடம் கேட்டபோது கூடுதலாக பணம் கொடுத்தால்தான் வீட்டை கட்டி முடிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி சென்றதால் பாபிசிம்ஹா அதிர்ச்சிஅடைந்தார்.

    இதையடுத்து ஜமீர், உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது பாபிசிம்ஹா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் பாபிசிம்ஹா கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது, ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால்தான் ஜமீருக்கு வீடுகட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ரூ.1.70 கோடி பணம் வாங்கி கொண்டு தரமற்ற கட்டிடப்பணிகளை செய்துள்ளனர்.

    பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் கொடுக்கவில்லை. முறைகேடு செய்தது குறித்து கேட்டபோது உள்ளூர் மக்களை திரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஒரு நடிகரான எனக்கே இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும். என சந்தேகம் எழுந்துள்ளது.

    பலமற்ற தரைத்தளம்,செட் அமைத்தது போல கட்டிட பணிகளை மோசமான நிலையில் கட்டி கொடுத்துள்ளனர். இதனை நான் புகாராக தெரிவித்தால் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர உள்ளேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். 30 வருடமாக வசித்து வரும் தன்னை கொடைக்கானலை சேர்ந்த சிலர் சமூகஆர்வலர் என்ற பெயரில் கூறிக்கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
    • கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார்.

    Mudhra's film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான "தடை உடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

    சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.

    நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

     

    கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது. அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.

    பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra's film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

    தொழில் நுட்ப குழுவினர்

    எழுத்து இயக்கம் - ராகேஷ் N.S

    தயாரிப்பு - ரேஷ்மி மேனன்

    ஒளிப்பதிவு - K.A.சக்திவேல்

    இசை - ஸ்ரீ

    பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா

    பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து

    படத்தொகுப்பு - பொன் கதிரேஷ் PK

    கூடுதல் திரைக்கதை - சாய்ராம் விஷ்வா

    லைன் புரடியூசர் - திலீப் குமார்

    நிர்வாக தயாரிப்பு - R.P.பால கோபி

    கலை - M.தேவேந்திரன்

    மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

    • மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
    • இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

    கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவிற்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை கொடைக்கானலை சேர்ந்த காண்ட்ராக்டர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொணடு வந்தனர்.

    இவர்களுக்கும், பாபிசிம்ஹாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் தாமதமாகி வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா காண்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் நடிகரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் பாபிசிம்ஹா கொடுத்த புகாரின்பேரில் காண்ட்ராக்டர்கள் உள்பட 4 பேர் மீது கொலைமிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா தெரிவிக்கையில், நான் முறையான அனுமதிபெற்றுதான் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறேன். பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

    இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார். என்னையும், எனது தாயாரையும் அவர் மிரட்டிய அனைத்து ஆவணங்களும் உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், வெளிநாட்டு பெண்மணியை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    அதேபோல் தன்னையும் அவர் மிரட்டி வருகிறார். பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ள இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தவும் தடையில்லை.

    கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

    கொடைக்கானல் பகுதியில் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது ஏன்? சுமார் 25 நாட்களுக்கு மேலாக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

    இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தெரிவிக்கையில், "குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோரது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என தாசில்தாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்படும். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    இது குறித்து வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. எனவே விதி மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கனரக வாகனங்கள் பயன்படுத்தியது குறித்தும் அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தவும் தடையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
    • கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

    கொடைக்கானல் பகுதியில் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது ஏன்? சுமார் 25 நாட்களுக்கு மேலாக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் தலைவர் மகேந்திரன் கூறும் போது, பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்து பஞ்சாயத்து அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பான மின் அனுமதி பெற்றுள்ளனர். பங்களாவுக்கு செல்ல பட்டா நிலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.

    பாபிசிம்ஹா பங்களாவை ஒட்டி இருக்கும் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற பிரச்சனையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தெரிவிக்கையில், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோரது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என தாசில்தாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்படும். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மின் வாரிய பொறியாளர் முருகேசன் தெரிவிக்கையில், பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. வில்பட்டி பஞ்சாயத்துக்கு கட்டும் வரி ரசீது இணைக்கப்பட்டுள்ளது. மின் வாரிய விதிகளின்படி தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால்போதும். கட்டிட அனுமதி தேவையில்லை. கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

    இது குறித்து வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. எனவே விதி மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கனரக வாகனங்கள் பயன்படுத்தியது குறித்தும் அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

    • இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வசந்த முல்லை'.
    • இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வசந்த முல்லை'. இந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி இணைந்துள்ளார். மேலும், நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

    கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும் எஸ். ஆர். டி. என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.


    வசந்த முல்லை முன்னோட்ட வெளியீட்டு விழா

    இப்படத்தின் முன்னோட்டத்தை கன்னட மொழியில் நடிகர் சிவராஜ் குமாரும் தெலுங்கில் சிரஞ்சீவியும் தமிழில் மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். இதன் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது, "தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன். கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே வர சொல்லி, 'வசந்த கோகிலா' எனும் இந்த படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

    தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, 'வசந்த கோகிலா' எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார். சிவ ராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும், அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது.


    வசந்த முல்லை முன்னோட்ட வெளியீட்டு விழா

    'டிஸ்கோ ராஜா' எனும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ராம் தல்லூரி எனக்கு அறிமுகமானார். நட்புடன் பழகத் தொடங்கியவுடன், படங்களில் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். இணைந்து பணியாற்றலாம் என்று சம்மதம் தெரிவித்து, இயக்குனர் ஒருவரை தேர்வு செய்து படத்தின் பணிகளைத் தொடங்கினோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கதை முழுமையாகாததால், வேறு கதைகளை தேடத் தொடங்கினோம். நான் இயல்பாகவே வேகமாக முடிவெடுப்பேன். அந்தத் தருணத்தில் முகநூலில் குறும்படம் ஒன்றை பார்த்தேன். அருண் என்ற நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த குறும்படம் அது. நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.

    அதன் இயக்குனரான ரமணன் புருஷோத்தமாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தித்தேன். அதன் பிறகு அவர் 2014-ஆம் ஆண்டு முதல் எனக்காக ஒரு கதையினை தயார் செய்து, இணைந்து பணியாற்றலாமா..! என செய்தி அனுப்பியிருந்தது தெரிய வந்தது. அவரிடம், 'முதல் படைப்பாக இதனை உருவாக்க வேண்டும் என்றளவில் ஏதேனும் கதைகள் இருக்கிறதா?' என்று கேட்டேன். ஒரே ஒரு வாக்கியத்தில் 'வசந்த முல்லை' படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக தயாரிப்பாளர் ராம் தல்லூரியைத் தொடர்பு கொண்டு கதையும் கதை சுருக்கத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே தருணத்தில் ரேஷ்மிக்கும் இந்த கதை பிடித்திருந்தது.


    வசந்த முல்லை முன்னோட்ட வெளியீட்டு விழா

    பின்னர் படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினோம். மிகவும் அழுத்தமான திரைக்கதை. படம் தொடங்கி 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு காட்சியை காணத் தவறினாலும், குழப்பம் ஏற்படலாம். ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் ராம் தல்லூரி உதவியுடன் ஒரு வணிக ரீதியான திரைப்படத்தை வழங்கி இருக்க முடியும். ஆனால் புதுமையான விசயத்தை நேர்த்தியாக சொல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் 'வசந்த முல்லை'யை உருவாக்கி இருக்கிறோம்.

    ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால், மூணாறு போன்ற மலை பிரதேசத்தில் நேரடியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பை நடத்தலாம் என திட்டமிட்டோம். ஆனால் காட்சிப்படி இரவு முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அரங்கம் அமைத்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இயலாத சூழல் உருவானது. பிறகு மீண்டும் அரங்கத்தை மறுசீரமைப்பு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்று பேசினார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

    பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது.

     

    தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

     

    இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அறம் பட இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார். #BobbySimha #GopiNainar
    கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
    இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். 

    ஆனால், அதற்கு முன்பாக நடிகர் ஜெய்யை வைத்து வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்கினார். இதில் ஜெய்யுடன் டேனியல் அனி போப், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



    இந்த நிலையில், கோபி நயினார் அடுத்ததாக இயக்கும் படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் விரைவில் துவங்கவிருக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் கலந்த படமாக உருவாகும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #BobbySimha #GopiNainar

    ‘அக்னி தேவி’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #AgniDevi #BobbySimha
    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’.

    இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா இயக்குனர் மற்றும் படக்குழு மீது பல்வேறு புகார்களை கூறினார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், டூப் வைத்து எடுத்த காட்சிகளை தன் காட்சிகள் என்று படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி வழக்கும் தொடர்ந்தார்.

    மேலும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.பி.ஆர் என்கிற ஜான் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளாக எஸ்.எஸ்.துரைராஜ், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் இன்று கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

    அதில் பாபிசிம்ஹா கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், அவரால் தான் படக்குழு கடுமையாக பாதிக்கப்பட்டது, போலீசார் ஜான் பால்ராஜுக்கு எந்த நெருக்கடியும் தராமல் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AgniDevi #BobbySimha

    அக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. #AgniDevi #BobbySimha
    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா ஒரு புகார் கூறினார்.

    நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பேசவே இல்லை. எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள்’ என்று கூறினார். படக்குழுவினர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.

    அக்னிதேவி படம் கடந்த வாரம் ரிலீசானது. பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பாபி சிம்ஹா எப்படி எல்லாம் தங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ‘பாபி சிம்ஹா மற்றும் ‘அக்னி தேவி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.



    இதில் எதற்குமே ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறி இருக்கிறார்.

    கூட்டத்தில் பேசிய வி‌ஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ‘பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால் தயாரிப்பாளருக்கோ ரூ.10 கோடி வரை நஷ்டம். இயக்குனரே கஷ்டப்பட்டு படத்தை தயாரித்து இருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார்.

    எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் உதவி கேட்டார். பேசி தீர்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய வி‌ஷயத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.

    அந்த இயக்குனர் தலைமறைவாகும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? எப்.ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் குற்றம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லிவிட்டார்.

    எதற்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்’.

    இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார். #AgniDevi #BobbySimha #JPR

    அக்னிதேவி பட விவகாரத்தில் என்னை பழிவாங்க நினைக்கிறார்கள் என்று நடிகர் பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். #AgniDevi #BobbySimha
    பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடித்த படம் அக்னிதேவ். படப்பிடிப்பில் இயக்குனர்களுடன் மோதல் ஏற்பட்டதால் படத்தில் இருந்து பாபி சிம்ஹா விலகினார். படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அதையும் மீறி படம் அக்னி தேவி என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது.

    இதை கண்டித்து பாபிசிம்ஹா கூறியதாவது:-

    “எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதாக கூறினர். கதையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லி படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் படப்பிடிப்பில் சம்பந்தம் இல்லாமல் வேறு காட்சிகளை சேர்த்தனர். இயக்குனரின் உறவினர் என்று இன்னொருவரும் வந்து படத்தை இயக்கினார்.



    சங்கத்துக்கு தெரியாமல் டைரக்டரே சண்டை காட்சியை எடுத்தார். இதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதன்பிறகு சில காட்சிகளில் கிராபிக்ஸ் செய்து சேர்த்துள்ளனர். வேறு ஒருவரை எனக்கு டப்பிங் பேச வைத்துள்ளனர். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்த நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டனர். என்னை பழிவாங்க நினைக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு பாபிசிம்ஹா கூறினார்.

    தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ‘பாபிசிம்ஹா நடிக்க மறுத்ததால் பெரிய நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பல முறை அவரை அழைத்தும் படப்பிடிப்புக்கு வரவில்லை. எனவே நஷ்டத்தை தவிர்க்க படத்தை திரைக்கு கொண்டு வந்தோம்’ என்றனர்.
    ×