என் மலர்
நீங்கள் தேடியது "thadai udai"
சினிமாவில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் எப்படியாவது படம் எடுத்திட வேண்டும் என்கிற லட்சியப் பயணத்தில் இருக்கிறார்கள்.
கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து தனது அடுத்த தலைமுறையை மீட்டெடுக்க போராடும் நபர், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்ற உண்மை சம்பவத்தை இளைஞர்கள் குறும்படமாக எடுக்கின்றனர்.
இந்த குறும்படம் மூலம் தங்களுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், படம் தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால், தங்களது கனவு சிதைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.
அப்போது சோகத்தில் இருக்கும் நண்பர்கள் மூன்று பேரும் ஒருவரிடம் காரில் லிப்ட் கேட்டு செல்கின்றனர். அந்த கார் ஓட்டுனரிடம் குறும்படத்தின் கதையை சொல்கின்றனர்.
முதல் பாதி இப்படி இருக்க.. இரண்டாம் பாதியில் மற்றொரு கதை வருகிறது. முதல் கதையில் வந்த கதாப்பாத்திரங்கள் வேறு மாதிரி சித்தரிக்கப்படுகின்றன. இதில், அங்காடி தெரு மகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமூக வலைத்தளத்தின் மோகத்தால் மகேஷின் சகோதரி தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த தற்கொலை சம்பவத்திற்கும் முதல் பாதியின் கதைக்கும் இணையும் இடத்தில் சில திருப்பங்கள் நடக்கின்றன.
இறுதியில், இளைஞர்கள் சினிமாவில் சாதித்தார்களா? பெண்ணின் தற்கொலைக்கு யார் காரணம்? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
அங்காடித்தெரு மகேஷ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது உள்ளிட்டோரும் கொடுத்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்கம்
இயக்குனர் அறிவழகன் முருகேசன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கதையை பல்வேறு கோணங்களில் நகர்த்தி, கதாப்பாத்திரங்களை இன்னும் சரியான முறையில் கையாண்டிருக்கலாம்.
இசை
சாய் சுந்தரின் இசையில் பாடல்கள், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு
படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நாடகத்தன்மை.
- சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
- கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார்.
Mudhra's film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான "தடை உடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது. அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra's film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப குழுவினர்
எழுத்து இயக்கம் - ராகேஷ் N.S
தயாரிப்பு - ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவு - K.A.சக்திவேல்
இசை - ஸ்ரீ
பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு - பொன் கதிரேஷ் PK
கூடுதல் திரைக்கதை - சாய்ராம் விஷ்வா
லைன் புரடியூசர் - திலீப் குமார்
நிர்வாக தயாரிப்பு - R.P.பால கோபி
கலை - M.தேவேந்திரன்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)






